search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான நவதானிய சுண்டல்
    X

    சத்தான சுவையான நவதானிய சுண்டல்

    தானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று நவதானியங்களை சேர்த்து சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளை கொண்டைக்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை, காராமணி, பாசிப்பயிறு, கொள்ளு, மொச்சை, சிவப்பு சோயா, ராஜ்மா, காய்ந்த பட்டாணி  - தலா 4 டேபிள்ஸ்பூன் அல்லது சமஅளவு,

    கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
    பெருங்காயத்தூள் - அரை சிட்டிகை

    அரைக்க:

    தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 4,
    இஞ்சி - சிறிய துண்டு.
    சோம்பு - கால் டீஸ்பூன்,
    பட்டை - சிறிய துண்டு.



    செய்முறை:

    இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

    தானியங்கள் அனைத்தையும் நன்றாக சுத்தம் செய்து 2 மணிநேரம் ஊறவைத்து ஒன்றாக சேர்த்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.

    அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் வேகவைத்த தானியம், அரைத்த விழுது சேர்த்துக் கிளறவும்.

    பச்சை வாசனை போனதும், இறக்கவும்.

    சத்தான சுவையான நவதானிய சுண்டல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×