search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த கேரட் - தேங்காய் பானம்
    X

    சத்து நிறைந்த கேரட் - தேங்காய் பானம்

    காலையில் குழந்தைகளுக்கு கேரட் - தேங்காய் பானம் கொடுப்பதன் மூலம் சுறுசுறுப்பு, புத்துணர்ச்சி கிடைக்கும். இன்று இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 2
    தேங்காய் - அரை மூடி
    தேன் அல்லது பனங்கற்கண்டு - 2 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் - 2



    செய்முறை :

    கேரட், தேங்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

    நறுக்கிய இரண்டையும் மிக்ஸியில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

    தேன் அல்லது பனங்கற்கண்டு, பொடித்த ஏலக்காய் சேர்த்து கலந்து சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து சில்லென்று பரிமாறவும்.

    சத்து நிறைந்த கேரட் - தேங்காய் பானம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×