search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு சத்தான கேரட் - முந்திரி அடை
    X

    குழந்தைகளுக்கு சத்தான கேரட் - முந்திரி அடை

    குழந்தைகளுக்கு தினமும் கேரட், முந்திரி கொடுப்பது உடலுக்கு நல்லது. இன்று கேரட், முந்திரி வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துவரம் பருப்பு - 1 கப்
    கடலை பருப்பு - அரை கப்
    காய்ந்த மிளகாய் - 3
    அரிசி - 2 கப்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    கேரட் துருவல் - கால் கப்
    முந்திரி - தேவையான அளவு
    நெய் - தேவைக்கு



    செய்முறை :

    முந்திரி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை நீரில் 1 மணிநேரம் ஊற வைக்கவும்.

    ஊறவைத்த பருப்பு, அரிசியை மிக்சியில் போட்டு பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவில் உப்பு, கேரட் துருவல், கொத்தமல்லி போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து சற்று தடிமனாக ஊற்றி அதன் மேல் நறுக்கிய முந்திரியை தூவி கைகளால் அழுத்தி விட்டு சுற்றி நெய் ஊற்றி மூடி போட்டு வேக விடவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    சத்து நிறைந்த கேரட் - முந்திரி அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×