search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மணத்தக்காளி கீரை - தேங்காய் பால் சூப்
    X

    மணத்தக்காளி கீரை - தேங்காய் பால் சூப்

    வயிற்று புண்ணால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி உணவில் மணத்தக்காளி கீரையை சேர்த்து கொள்வது நல்ல பலனை தரும். இன்று மணத்தக்காளி கீரையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மணத்தக்காளி கீரை - அரை கட்டு,
    சின்ன வெங்காயம் - 10,
    பூண்டு - 3 பல்,
    தேங்காய்ப்பால் - அரை கப்,
    உப்பு - சுவைக்கேற்ப,
    மிளகுத்தூள் - சிறிதளவு,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

    வெங்காயம், பூண்டு தோலுரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் கீரையையும் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும்.

    அடுத்து அதில் 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்குங்கள்.  

    குக்கர் விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மிளகுத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.

    மணத்தக்காளி கீரை - தேங்காய் பால் சூப் ரெடி.

    வயிற்றுப்புண்ணுக்கு நல்ல மருந்து இந்த சூப்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×