search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த கேரட் - சோயா சூப்
    X

    சத்து நிறைந்த கேரட் - சோயா சூப்

    அதிகளவு சத்துக்கள் நிறைந்த கேரட் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. இன்று சத்து நிறைந்த கேரட், சோயா சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சோயா - 100 கிராம்,
    துருவிய கேரட் - 1 டேபிள்ஸ்பூன்,
    இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
    தனியா, சோம்பு, சீரகம், மிளகாய், மஞ்சள் தலா - 1 டீஸ்பூன்,
    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    கொத்தமல்லித்தழை - சிறிது,
    வெங்காயம் - 1,
    தக்காளி - 1,
    தேங்காய்ப்பால் - 1/2 டம்ளர்,
    நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    நெய் - 1/2 டீஸ்பூன்,
    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 1.



    செய்முறை :

    சோயாவை நன்றாக கழுவி வேக வைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் நல்லெண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் சோயா மற்றும் துருவிய கேரட்டை சேர்த்து உப்பு, மசாலா வகைகளை சேர்த்து நன்கு வேக விடவும்.

    கடைசியாக தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்க விட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

    சத்தான கேரட் - சோயா சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×