search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வாதநோயை குறைக்கும் முடக்கத்தான் கீரை சாதம்
    X

    வாதநோயை குறைக்கும் முடக்கத்தான் கீரை சாதம்

    வாதநோயை குறைக்கும் தன்மை கொண்டது முடக்கத்தான் கீரை. இன்று இந்த கீரையை வைத்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    துவரம் பருப்பு - 1 கப்,
    அரிசி  - 1 கப்,
    ஆய்ந்த கீரை -  1 கைப்பிடி
    நெய், எண்ணெய் - 1 தேக்கரண்டி.,
    கடுகு  - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை -  சிறிது,
    பெருங்காயம்  - சிறிது,
    வெங்காயம் - 1,
    தக்காளி - 1,
    மஞ்சள் தூள் -  அரை தேக்கரண்டி.,
    சாம்பார்த்தூள் - ருசிக்கேற்ப,
    பட்டை - 2 துண்டு
    கிராம்பு - 2,
    பிரிஞ்சி இலை - 1,
    ப.மிளகாய் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு

    அரைக்க :

    தேங்காய் - 1 கப்
    சீரகம் -  அரை தேக்கரண்டி.,
    ப.மிளகாய் -  காரத்திற்கேற்ப,



    செய்முறை

    அரிசி, பருப்பை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊரவைக்கவும்

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.

    குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கீரையை சேர்த்து வதக்கவும்.

    கீரை வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து கொதி வரும் போது அரிசி, பருப்பு, ஊற வைத்த தண்ணீருடன் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை மிதமாக எரியவைத்து 5 நிமிடம் அல்லது தேவைக்கேற்ப வேகவிடவும்.

    குக்கர் திறந்தவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லிதூவி, நெய் சேர்த்து தயிர்சட்னி அப்பளத்துடன் பரிமாறலாம்.

    சூப்பரான முடக்கத்தான் கீரை சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×