என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சிறுதானிய முருங்கை கீரை அடை
Byமாலை மலர்12 April 2018 4:56 AM GMT (Updated: 12 April 2018 4:56 AM GMT)
சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிறுதானியங்கள், முருங்கை கீரை சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு - கால் கிலோ,
குதிரைவாலி அரிசி, சாமை அரிசி, வரகு அரிசி - கால் கிலோ,
முழு கருப்பு உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை - 4 டீஸ்பூன்,
வெங்காயம் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
முருங்கை கீரை - 2 கைப்பிடி
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை, குதிரை வாலி அரிசி, சாமை அரிசி, வரகரிசி இவை அனைத்தையும் காலையில் முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும்.
அனைத்தும் நன்றாக ஊறியதும், இரவு ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும்.
காலையில் முளை கட்டி இருக்கும் கலவையை இஞ்சி, பூண்டு, உப்பு, அரைத்துக்கொள்ளவும்.
முருங்கைக்கீரையை சிறிது எண்ணெயில் வதக்கி அரைத்த மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுத்து வெங்காயத்தை சேர்த்து கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
சூப்பரான சிறுதானிய முருங்கை கீரை அடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு - கால் கிலோ,
குதிரைவாலி அரிசி, சாமை அரிசி, வரகு அரிசி - கால் கிலோ,
முழு கருப்பு உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை - 4 டீஸ்பூன்,
வெங்காயம் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
முருங்கை கீரை - 2 கைப்பிடி
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை, குதிரை வாலி அரிசி, சாமை அரிசி, வரகரிசி இவை அனைத்தையும் காலையில் முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும்.
அனைத்தும் நன்றாக ஊறியதும், இரவு ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும்.
காலையில் முளை கட்டி இருக்கும் கலவையை இஞ்சி, பூண்டு, உப்பு, அரைத்துக்கொள்ளவும்.
முருங்கைக்கீரையை சிறிது எண்ணெயில் வதக்கி அரைத்த மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுத்து வெங்காயத்தை சேர்த்து கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
சூப்பரான சிறுதானிய முருங்கை கீரை அடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X