search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான காலை உணவு குதிரைவாலி வெந்தய கஞ்சி
    X

    சத்தான காலை உணவு குதிரைவாலி வெந்தய கஞ்சி

    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று குதிரைவாலி அரிசியில் வெந்தய கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி - 3/4 கப்
    பச்சை பருப்பு - 1/4 கப்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    கேரட் துண்டுகள் - 2
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - சிறு துண்டு , பொடியாக நறுக்கவும் ( விரும்பினால் )
    கொத்தமல்லி தழை - சிறிதளவு,
    புதினா - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பூண்டு - 4 பற்கள்
    மஞ்சத்தூள் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    பால் ( அ ) தேங்காய் பால் - 1/2 கப்



    செய்முறை :


    கேரட், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குதிரைவாலி, பருப்பு மற்றும் வெந்தயத்தை நன்றாக கழுவி குக்கரில் போட்டு அதனுடன் 3 1/2 கப் தண்ணீர், கேரட், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, ப.மிளகாய், மஞ்சள் தூள், பூண்டு, உப்பு, கறிவேப்பிலை,  சேர்த்து 3 விசில் போட்டு மேலும் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக விடவும்.

    விசில் போனவுடன் கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.

    கடைசியாக பால் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    குதிரைவாலி வெந்தய கஞ்சி சூடாக சுவைத்தால் மிக மிக அருமையாக இருக்கும்.

    சூப்பரான குதிரைவாலி வெந்தய கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×