என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
புரதம் மிகுந்த சோயா - மஞ்சள் பூசணி சூப்
Byமாலை மலர்30 March 2018 4:11 AM GMT (Updated: 30 March 2018 4:11 AM GMT)
சோயா புரதம் மிகுந்தது என்பதால் ஏதாவது ஒரு விதத்தில் உணவுடன் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சோயாவை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சோயா புரதம் மிகுந்தது என்பதால் ஏதாவது ஒரு விதத்தில் உணவுடன் கலந்து எடுத்துக் கொள்ள அறிவுறுத்துகிறார்கள். எல்லா வகை சூப்பிலுமே சோயா பவுடர், வெந்தயப்பொடி, இரண்டும் புரதத்துக்காவும், நார்ச்சத்துக்காகவும் சேர்க்கப்படலாம்.
தேவையான பொருட்கள் :
சோயா - 1/4 கப்,
மஞ்சள் பூசணி - 1 கப்,
[பாட்டி மசாலா] மல்லித்தூள் - 1 மேஜை கரண்டி,
[பாட்டி மசாலா] சீரகத்தூள் - 1 மே.க,
[பாட்டி மசாலா] சிவப்பு மிளகாய்த்தூள் - 1/4 மே.க,
வெங்காயம் - 1
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதல் நாள் இரவே சோயா பீன்சை கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய சோயா பீன்சை தண்ணீரை வடித்துவிட்டு நன்கு வேகவிடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் சோயாவுடன் சேர்த்து மஞ்சள் பூசணி துண்டுகள், [பாட்டி மசாலா] தனியாப்பொடி, [பாட்டி மசாலா] சீரகப்பொடி, [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து ஒரு விசில் வரும் வரை வேக வைத்து இறக்கி ஆறவிடவும்.
ஆறியபின் சிறிது சோயாவை தனியாக எடுத்து வைத்துவிட்டு மீதியை மிக்சியில் அரைத்து வடிகட்டவும்.
தனியாக வைத்த சோயாவை சேர்த்து கொதிக்கவிடவும்.
தேவையான தண்ணீர், உப்பு சேர்க்கவும்.
கடைசியாக கொத்தமல்லிஇலை தூவி, எலுமிச்சை சாறு கலந்து பரிமாறலாம்.
சூப்பரான சோயா சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தேவையான பொருட்கள் :
சோயா - 1/4 கப்,
மஞ்சள் பூசணி - 1 கப்,
[பாட்டி மசாலா] மல்லித்தூள் - 1 மேஜை கரண்டி,
[பாட்டி மசாலா] சீரகத்தூள் - 1 மே.க,
[பாட்டி மசாலா] சிவப்பு மிளகாய்த்தூள் - 1/4 மே.க,
வெங்காயம் - 1
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதல் நாள் இரவே சோயா பீன்சை கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய சோயா பீன்சை தண்ணீரை வடித்துவிட்டு நன்கு வேகவிடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் சோயாவுடன் சேர்த்து மஞ்சள் பூசணி துண்டுகள், [பாட்டி மசாலா] தனியாப்பொடி, [பாட்டி மசாலா] சீரகப்பொடி, [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து ஒரு விசில் வரும் வரை வேக வைத்து இறக்கி ஆறவிடவும்.
ஆறியபின் சிறிது சோயாவை தனியாக எடுத்து வைத்துவிட்டு மீதியை மிக்சியில் அரைத்து வடிகட்டவும்.
தனியாக வைத்த சோயாவை சேர்த்து கொதிக்கவிடவும்.
தேவையான தண்ணீர், உப்பு சேர்க்கவும்.
கடைசியாக கொத்தமல்லிஇலை தூவி, எலுமிச்சை சாறு கலந்து பரிமாறலாம்.
சூப்பரான சோயா சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X