என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
உடலுக்கு சத்து நிறைந்த கீரை சூப்
Byமாலை மலர்20 March 2018 4:40 AM GMT (Updated: 20 March 2018 4:40 AM GMT)
சர்க்கரை நோயாளிகள் தினமும் ஏதாவது கீரை சூப் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று எளிய முறையில் கீரை சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 1,
ஏதேனும் ஒரு கீரை - 1 1/2 கப்,
பூண்டு - 1 பல்,
இஞ்சி - 1/2 துண்டு,
கொழுப்புச்சத்து நீக்கப்பட்ட பால் - 1 1/2 கப்,
சோள மாவு - 1 1/2 ஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 1 உப்பு,
[பாட்டி மசாலா] மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
செய்முறை :
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீரையை போடவும்.
அடுத்து அதனுடன் இஞ்சியையும் பூண்டையும் ஒரு. துணியில் மூட்டையாக கட்டி கீரையுடன் சேர்க்கவும், பிரிஞ்சி இலையை சேர்க்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
ஆறிய பின் இஞ்சி பூண்டு முடிந்து வைத்த மூட்டையையும், பிரிஞ்சி இலையையும் கசக்கி பிழியவும். பிழிந்த பின் இஞ்சி, பூண்டு, பிரிஞ்சி இலையை எடுத்து விடவும்.
கீரையுடன் இருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு கீரையை அரைக்கவும் .
அடுத்து அதில் வடித்த கீரை தண்ணீரை சேர்க்கவும். தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்க்கவும்.
அடுத்து அதில் சோள மாவை, குளிர்ந்தபாலில் சேர்த்து கரைத்து சூப்பில் சேர்க்கவும். மீதிப்பாலை சேர்த்து மெதுவாக கலந்து விடவும்.
கடைசியாக [பாட்டி மசாலா] மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
சூப்பரான கீரை சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெங்காயம் - 1,
ஏதேனும் ஒரு கீரை - 1 1/2 கப்,
பூண்டு - 1 பல்,
இஞ்சி - 1/2 துண்டு,
கொழுப்புச்சத்து நீக்கப்பட்ட பால் - 1 1/2 கப்,
சோள மாவு - 1 1/2 ஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 1 உப்பு,
[பாட்டி மசாலா] மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
செய்முறை :
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீரையை போடவும்.
அடுத்து அதனுடன் இஞ்சியையும் பூண்டையும் ஒரு. துணியில் மூட்டையாக கட்டி கீரையுடன் சேர்க்கவும், பிரிஞ்சி இலையை சேர்க்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
ஆறிய பின் இஞ்சி பூண்டு முடிந்து வைத்த மூட்டையையும், பிரிஞ்சி இலையையும் கசக்கி பிழியவும். பிழிந்த பின் இஞ்சி, பூண்டு, பிரிஞ்சி இலையை எடுத்து விடவும்.
கீரையுடன் இருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு கீரையை அரைக்கவும் .
அடுத்து அதில் வடித்த கீரை தண்ணீரை சேர்க்கவும். தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்க்கவும்.
அடுத்து அதில் சோள மாவை, குளிர்ந்தபாலில் சேர்த்து கரைத்து சூப்பில் சேர்க்கவும். மீதிப்பாலை சேர்த்து மெதுவாக கலந்து விடவும்.
கடைசியாக [பாட்டி மசாலா] மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
சூப்பரான கீரை சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X