search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நீரிழிவு நோயாளிகளுக்கான பாசிப்பருப்பு அடை
    X

    நீரிழிவு நோயாளிகளுக்கான பாசிப்பருப்பு அடை

    பாசிப்பருப்பு அடை நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த சத்தான டிபன். இன்று இந்த பாசிப்பருப்பு அடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசிப்பருப்பு - 1கப்,
    உளுந்து - 1 கப்,
    துவரம் பருப்பு - 1 கப்,
    வெங்காயம் - 1,
    பெருங்காய தூள் - அரை டீஸ்பூன்,
    ப.மிளகாய் - 5,
    கொத்தமல்லி இலை - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    பருப்பு வகைகளை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஒன்றாக ஊறவைத்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைத்த மாவில் நறுக்கி வெங்காயம், பெருங்காய தூள், ப.மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான பாசிப்பருப்பு அடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×