search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சாமை பெசரட்
    X

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சாமை பெசரட்

    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று பச்சைப்பயறு, சாமை சேர்த்து பெசரட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பயறு - 1 கப்
    சாமை - அரை கப்
    பச்சை மிளகாய் - 5
    [பாட்டி மசாலா] சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
    கடுகு - அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    பச்சைப் பயறையும் சாமை அரிசியையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

    நன்றாக ஊறியதும் அதனுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நைஸாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவை தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும்.

    அதனுடன் கறிவேப்பிலை, [பாட்டி மசாலா] சீரகத் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து கடுகை தாளித்து அதில் சேர்க்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

    மொறுமொறுப்புடன் இருக்கும் இந்த பெசரட்டுடன் தக்காளி சட்னி அல்லது இஞ்சி சட்னி சேர்த்துப் பரிமாறலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×