என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான சுவையான வாழைத்தண்டு சட்னி
Byமாலை மலர்10 Feb 2018 4:36 AM GMT (Updated: 10 Feb 2018 4:36 AM GMT)
வாழைத்தண்டு இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதைத் தடுக்கும். இன்று வாழைத்தண்டை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உளுந்து - 3 டீஸ்பூன்
தனியா(மல்லி) - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
வெள்ளை எள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
வாழைத்தண்டு (நறுக்கியது) - ஒரு கப்
பூண்டு - 4 பல்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
தேங்காய்த்துருவல் - 10 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை :
வாழைத்தண்டை நார் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
வெறும் வாணலியில் உளுந்து, தனியா (மல்லி), சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் வெள்ளை எள்ளை அடுத்தடுத்து சேர்த்து வறுத்து ஆறவிடவும்.
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வாழைத்தண்டு சேர்த்து மிதமான தீயில் லேசாக வதக்கவும்.
வாழைத்தண்டு ஆறியதும், ஏற்கெனவே வதக்கிய வற்றுடன் சேர்த்து, தேங்காய்த் துருவல் உப்பு, புளி, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
வாழைத்தண்டு சட்னி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உளுந்து - 3 டீஸ்பூன்
தனியா(மல்லி) - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
வெள்ளை எள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
வாழைத்தண்டு (நறுக்கியது) - ஒரு கப்
பூண்டு - 4 பல்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
தேங்காய்த்துருவல் - 10 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை :
வாழைத்தண்டை நார் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
வெறும் வாணலியில் உளுந்து, தனியா (மல்லி), சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் வெள்ளை எள்ளை அடுத்தடுத்து சேர்த்து வறுத்து ஆறவிடவும்.
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வாழைத்தண்டு சேர்த்து மிதமான தீயில் லேசாக வதக்கவும்.
வாழைத்தண்டு ஆறியதும், ஏற்கெனவே வதக்கிய வற்றுடன் சேர்த்து, தேங்காய்த் துருவல் உப்பு, புளி, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
வாழைத்தண்டு சட்னி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X