search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த மரவள்ளி கிழங்கு தோசை
    X

    சத்து நிறைந்த மரவள்ளி கிழங்கு தோசை

    மரவள்ளி கிழங்கில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று மரவள்ளி கிழங்கை வைத்து சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மரவள்ளி கிழங்கு - 250 கிராம்
    பச்சரிசி - 250 கிராம்
    வெந்தயம் - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 3 



    செய்முறை :

    பச்சரிசியை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

    மரவள்ளி கிழங்கு தோல் சீவி பொடியாக நறுக்கிகொள்ளவும. 

    அரிசி நன்றாக ஊறியதும் அதனுடன் சீரகம், வெந்தயம், பச்சைமிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும். 

    மரவள்ளி கிழங்கையும் அரைத்து மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். அதிக நேரம் புளிக்க வைக்க தேவையில்லை. 2 லிருந்து 3 மணி நேரம் வைத்து தோசை வார்க்கலாம். தோசை மாவு நீர்க்க வைத்துக்கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து மெல்லிய தோசையாக வார்த்தெடுக்கவும். விருப்பத்திற்கேற்ப எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.

    சூப்பரான மரவள்ளி கிழங்கு தோசை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×