என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சோள அடை
Byமாலை மலர்28 Dec 2017 4:24 AM GMT (Updated: 28 Dec 2017 4:25 AM GMT)
சோளத்தில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்ற உதவும். இன்று சோளத்தை பயன்படுத்தி அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெள்ளைச் சோளம் - 2 கப்
கடலைப்பருப்பு - 1 கப்
துவரம்பருப்பு - 1 கப்
உளுந்தம்பருப்பு - கால் கப்
மிளகாய் வற்றல் - 10
மிளகு - அரை டீஸ்பூன்
தாளிக்க :
வெங்காயம் - 2,
எண்ணெய் - தேவையான அளவு,
கறிவேப்பிலை - தேவையான அளவு.
செய்முறை :
வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
வெள்ளை சோளம், கடலைப்பருப்பு, துவரம் பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து மிளகாய் வற்றல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவில் பொடித்த மிளகு, உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சுவையான சத்தான சோள அடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X