search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஓட்ஸ் அடை
    X

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஓட்ஸ் அடை

    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் ஓட்ஸை சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று ஓட்ஸ் அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    புழுங்கல் அரிசி  - அரை கப்,
    ஓட்ஸ் - அரை கப்,
    துவரம்பருப்பு - அரை கப்,
    பாசிப்பருப்பு - அரை கப்,
    வெங்காயம் - 3,
    காய்ந்த மிளகாய் - 4,
    தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    கறிவேப்பிலை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    ஓட்ஸை அரை மணி நேரம் ஊற வைத்து இதனுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவேண்டும்.

    வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கி மாவில் சேர்க்க வேண்டும்.

    அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான ஓட்ஸ் அடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×