search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சரியாக தூங்காவிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்
    X

    சரியாக தூங்காவிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்

    தூக்கத்தின் அவசியத்தினை உணர்ந்து இரவு வெகு நேரம் விழித்து டி.வி. பார்த்தல், போன் பேசுதல், செல்போனில் மூழ்குதல் இவற்றினைத் தவிர்த்து 7-8 மணி நேரமாவது அன்றாடம் தூங்க வேண்டும்.
    முறையாக 7-8 மணி நேர தூக்கம் அன்றாடம் இல்லையா? இரவில் அதிக நேரம் தனியே விழித்து தவிக்கின்றீர்களா? இதனால் இவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பார்ப்போம்.

    * தூக்கம் நமக்கு கிடைத்த ஆசிர்வாதம். தூங்கும் பொழுதுதான் நம் உடலில் ரிப்பேர்கள் நடக்கின்றன. வளர்ச்சி ஏற்படுகின்றது. சக்தி சேமிக்கப்படு கின்றது. ஊட்டச் சத்து உடலுக்கு அளிக்கப்படு கின்றது.

    * தூக்கத்தில் தான் ஹார்மோன்கள் சீர் செய்யப்படுகின்றன.

    * நோய் எதிர்ப்புச் சக்தி கூடுகின்றது

    * ஞாபக சக்தி கூடுகின்றது. தூக்கமின்மை ஒருவரை பித்து பிடித்தவர் போல் ஆக்கி விடும்.

    தூக்கமின்மை

    * மறதி நோயினை ஏற்படுத்தும். கவனிக்கும் திறன் வெகுவாய் குறையும்.
    * தூக்கமின்மை அதிக எடையினைக் கூட்டும்.
    * சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும்.
    * இருதய சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.
    * மனநிலை பாதிக்கப்படுவர்.
    * ப்ராஸ்சேர் புற்று நோய் பாதிப்பு ஆண்களுக்கு கூடும்.

    ஆக தூக்கத்தின் அவசியத்தினை உணர்ந்து இரவு வெகு நேரம் விழித்து டி.வி. பார்த்தல், போன் பேசுதல், செல்போனில் மூழ்குதல் இவற்றினைத் தவிர்த்து 7-8 மணி நேரமாவது அன்றாடம் தூங்க வேண்டும்.
    Next Story
    ×