என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
இரத்த சோகையை தடுக்கும் முருங்கை கீரை
Byமாலை மலர்3 April 2019 7:54 AM GMT (Updated: 3 April 2019 7:54 AM GMT)
முருங்கை கீரையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளது. இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல இரத்தம் ஊறும்.
முருங்கை கீரையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளது. இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம், இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் வளரும் நாடுகளில் இது ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.
பசும்பாலைவிட அதிக கால்சியம் சத்து கொண்டது, அதிக புரத சத்துகொண்டது.
கேரட்டைவிட அதிக வைட்டமின் ஏ கொண்டது.
கீரை மற்றும் காய்கள், ரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகள் கொண்டதாகவும் மற்றும் ஒரு வலிமையான கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.
முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் இரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல இரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை பட்டையோடு வெள்ளைக் கடுகு, பெருங்காயம் இவற்றை சேர்த்து நன்கு அரைத்து சூடாக்கி மூட்டு வீக்கத்தின் மீது பற்று போட சில நாட்களில் மூட்டுவலி குணமாகும்.
முருங்கை கீரையுடன் உப்பு சேர்த்து இடித்து சாறு எடுத்து அதை இடுப்பில் நன்றாக தேய்த்தால் இடுப்புவலி குறையும்.
பசும்பாலைவிட அதிக கால்சியம் சத்து கொண்டது, அதிக புரத சத்துகொண்டது.
கேரட்டைவிட அதிக வைட்டமின் ஏ கொண்டது.
கீரை மற்றும் காய்கள், ரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகள் கொண்டதாகவும் மற்றும் ஒரு வலிமையான கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.
முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் இரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல இரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை பட்டையோடு வெள்ளைக் கடுகு, பெருங்காயம் இவற்றை சேர்த்து நன்கு அரைத்து சூடாக்கி மூட்டு வீக்கத்தின் மீது பற்று போட சில நாட்களில் மூட்டுவலி குணமாகும்.
முருங்கை கீரையுடன் உப்பு சேர்த்து இடித்து சாறு எடுத்து அதை இடுப்பில் நன்றாக தேய்த்தால் இடுப்புவலி குறையும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X