search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நாம் உண்ணும் உணவில் உள்ளது உடல் சுத்தம்
    X

    நாம் உண்ணும் உணவில் உள்ளது உடல் சுத்தம்

    உடல் சுத்தம் என்பது உடலினை சோப்பு கொண்டு தண்ணீர் ஊற்றி, குளித்து சுத்தம் செய்வது மட்டுமல்ல. நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, உபயோகிக்கும் பொருட்கள் இவற்றிலும் அசுத்தங்கள், நச்சுப் பொருட்கள் உள்ளன.
    உடல் சுத்தம் என்பது உடலினை சோப்பு கொண்டு தண்ணீர் ஊற்றி, குளித்து சுத்தம் செய்வது மட்டுமல்ல. நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, உபயோகிக்கும் பொருட்கள் இவற்றிலும் அசுத்தங்கள், நச்சுப் பொருட்கள் உள்ளன. அவை நம் உடலினுள் சென்று தாக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். ஆக நம் உள்அகவினையும், உள் உறுப்புகளையும் சுத்தம் செய்து கொள்வதே உடலினை ஆரோக்கியமாக வைக்கும். வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை இவையெல்லாம் நம்மை அதிகம் தாக்குகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி இல்லையெனில் எளிதில் தாக்கி விடுகின்றன. ஆக நச்சுகளை நீக்கும் பொழுதே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.

    அசைவ உணவு உண்பவர்கள் எலும்பு சூப் எடுத்துக் கொள்வது மிக சிறந்த சத்தினை அவர்களுக்கு அளிக்கும். கால்சியம், மக்னீசியம், வைட்டமின் கே, பி12, டி, அமினோ அமிலங்கள் என அனைத்தும் கிடைத்து விடும். மேலும் இந்த உணவு உடலின் வீக்கத்தினை நீக்கும்.

    குடலினை பாதுகாக்கும்
    நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும்.
    சருமம், நகம், முடியினை பாதுகாக்கும்.
    மூட்டுகளை வலுவாக்கும்.
    தூக்கமின்மை நீங்கும்.
    தொந்தரவில்லா தூக்கம் கொடுக்கும்.

    நிணநீர்: நிணநீர் தசைகளின் அசைவுகளினால் நம் உடலில் சுற்றி வருகின்றது. ஈரமின்றி மென்மையான பிரஷ் கொண்டு உடலின் மீது தேய்த்து விட நிணநீர் ஓட்டம் சீராகி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

    * சருமத்தின் மீதுள்ள உயிரற்ற செல்கள் உதிரும்.
    * ரத்த ஓட்டம் நன்கு இயங்கும்.
    * உடலில் சக்தி கூடும்.

    இவ்வாறு செய்த பின் சிறிது நேரம் ஷவர் குளியல் எடுத்துக் கொள்ளுங்கள். இதுவும் நிணநீர் ஓட்டத்தினையும் ரத்த ஓட்டத்தினையும் சீராய் வைக்கும்.
    துரித நடை, நடை பயிற்சி இவை அன்றாடம் 20 நிமிடங்கள் செய்ய முடியாதா என்ன? 20 நிமிட அன்றாட தியானம் தரும் பலன்களைப் பாருங்கள்.

    * உடல் வீக்கத்தினை குறைக்கும்.
    * ஞாபக சக்தியினைக் கூட்டும்.
    * ஸ்டிரெஸ் இருக்காது.
    * கவனம் செலுத்தி செயலாற்றும் திறன் கூடும்.
    * வலி குறையும்.
    * மூளை பலம் கூடும்.
    * எடை குறையும்.
    * அமைதியான உறக்கம் கிடைக்கும்.
    * குடல் பாதிப்புகள் வெகுவாய் மட்டுப்படும்.

    யோகா பயிற்சி செய்யுங்கள். டி.வி., போன், கம்ப்யூட்டர் இவற்றினை இரவில் முழுமையாய் அனைத்து விடுங்கள்.வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. நன்கு நீர் அருந்துங்கள். காலையில் திறந்த வெளியில் நன்கு சுவாசியுங்கள். கிரீன் டீ அருந்தும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

    * இனிமை யான இசை கேளுங்கள். நம்புங்கள். உங்கள் ஆரோக்கியம் கூடும்.
    * அவ்வப்போது 10 மணி நேர உண்ணாவிரதம் இருங்கள். தண்ணீர் குடிக்க வேண்டும்.
    * எப்ஸம் உப்பினை நீரில் கலந்து அவ்வப்போது குளியல் எடுத்துக் கொள்ளுங்கள்.
    * காலை அல்லது மாலை இளம் வெயிலில் சிறிது நேரம் இருங்கள்.
    * உங்கள் உடல் உள்ளும் புறமும் சுத்தமாகவும் ஆரோக்கிய மாகவும் இருக்கும்.

    தைராய்டு சுரப்பி புற்று நோய்: இவ் வகை புற்று நோய் அதிக அளவில் இல்லை என்றாலும் இதற்குரிய கவனத்தினை அளிக்காமல் இருக்க முடியாது. சில நேரங்களில் வேறு காரணங் களுக்காக நடத்தப்படும் பரிசோதனையிலே எதேச்சையாக கண்டறியப்படுகின்றது. சில அறிகுறிகள் தென்படும் போது அதற்குரிய கவனத்தினை அளித்து விட்டால் பல பிரச்சினை களிலிருந்து ஒருவர் தன்னை காத்துக் கொள்ள முடியும்.

    கழுத்து பகுதியில் ஏதேனும் கடித்தோ,, உருண்டையாகவோ இருந்தால் மிக சிறியதாக இருந்தாலும் மருத்துவ ஆலோசனை பெறுங்கள். இது புற்று நோய்தான் என்பதில்லை. ஆனால் உரிய மருத்துவ கவனம் பெற வேண்டும்.

    திடீரென தடித்த கரகரப்பான குரல் மாற்றம் ஏற்பட்டால் மருத்துவ கவனம் தேவைப்படும். 14&16 வயதில் இயற்கையாக ஆண் பிள்ளைகளுக்கு குரல் மாற்றம் ஏற்படும். ஆனால் இங்கு குறிப்பிடப்படுவது தடித்த கரகரப்பான குரல் மாற்றம் எந்த வயதிலும் ஆண்&பெண் இருவருக்கும் ஏற்படும் தாக்குதலைப் பற்றியதாகும்.

    * தொடர்ந்து நீண்ட நாள் இருமல். ஆனால் ஜீரமோ, சளியோ இல்லாது இருந்தால் மருத்துவ கவனம் தேவை.
    * விழுங்குவதில் கடினம் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
    * மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம்.
    * சில பிரிவு புற்று நோய்கள் ஆரம்ப கால கட்டத்தில் எளிதில் வெளியில் தெரிவதில்லை. உதாரணமாக
    * ஆண்களுக்கு சிறு நீர் செல்வதில் கடினம்
    * ஆண் பிறப்புறுப்பில் மாற்றம்
    * திடீரென ஏற்படும் சரும மாற்றம்

    * வாயில் ஏற்படும் சூடு புண்
    * நீண்ட நாள் இருமல்
    * வெளிப் போக்கில் ரத்தம்
    * வயிற்று வலி, வயிற்று பிரட்டல்
    * அடிக்கடி ஜீரம், கிருமி தாக்குதல்
    * விழுங்குவதில் கடினம்
    * காரணமின்றி எடை குறைதல்
    * தொடர் சோர்வு
    * தீரா நீண்ட நாள் தலைவலி
    இவைகளை உடனடியாக கவனித்தால் மிகவும் நல்லது.

    பொதுவில் புற்று நோய் நிபுணர்களால் சில தவிர்ப்பு முறைகள் அறிவுறுத்தப்படுகின்றன. அன்றாடம் விருந்து என்பது கூடாது. அதிக சர்க்கரை, தவறான உணவுகள் இவை உங்கள் கல்லீரலில் அதிக கொழுப்பினைச் சேர்த்து விடும். எனவே பிற்காலத்தில் கல்லீரல் புற்று நோய்க்கு காரணம் ஆகின்றது.

    * பதப்படுத்தப்பட்ட அசைவம்
    * மைக்ரோவேவில் செய்யப்படும் பாப்கார்ன்
    * மிக அதிக தீயில் கருகிய அசைவம்.
    * செயற்கை இனிப்புகள்
    * அதிக மது
    * கெட்ட கொழுப்பு
    * டப்பாவில் அடைக்கப்பட்ட உணவுகள்
    * அதிக சர்க்கரை
    * செயற்கை வாசனை, நிறங்கள் சேர்க்கப்பட்ட உணவுகள்.

    இவைகளை அடியோடு தவிர்த்து விடுவது நல்லது என வலியுறுத்தப்படுகின்றன.

    * நோய், எதிர்ப்புச் சக்தி நன்கு இருக்க வேண்டும் என்றால் ‘ஸ்ட்ரெஸ்’ அளவு ஒருவருக்கு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

    * பூண்டு *ப்ராகலி *கொட்டை வகைகள் *எலுமிச்சை *கிரீன் டீ *ஆப்பிள் *சாலட் *நார்சத்து *முட்டைகோஸ் *காரட் *சோளம் *பேரீச்சை *முட்டை *இஞ்சி *திராட்சை * பட்டாணி *மாதுளை இவைகளை உணவில் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
    * ஆரோக்கியமாக இருந்தாலும் வருடம் ஒருமுறை செக்-அப் செய்து கொள்ளுங்கள்.
    * தேவையான தடுப்பு ஊசிகளை போட்டுக் கொள்ளுங்கள்.
    * அளவான எடையில் இருங்கள்.
    Next Story
    ×