search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    திருத்தி கொள்ள வேண்டிய சுகாதாரமற்ற பழக்கங்கள்
    X

    திருத்தி கொள்ள வேண்டிய சுகாதாரமற்ற பழக்கங்கள்

    ஒவ்வொருவருக்கும் சில சுய சுகாதாரங்கள் அவசியம். அவரவர் அறியாமலேயே சில சுகாதாரமற்ற பழக்கங்கள் அவர்களிடம் இருக்கும். அவற்றில் சில கீழே கூறப்பட்டுள்ளது. அவற்றினை நாம் சரி செய்து கொள்ளலாமே.
    ஒவ்வொருவருக்கும் சில சுய சுகாதாரங்கள் அவசியம். அவரவர் அறியாமலேயே சில சுகாதாரமற்ற பழக்கங்கள் அவர்களிடம் இருக்கும். அவற்றில் சில கீழே கூறப்பட்டுள்ளது. அவற்றினை நாம் சரி செய்து கொள்ளலாமே.

    * முகத்தில் சிறு பரு வந்தாலும் பலருக்கு ஒரு பழக்கம். அதனை பிய்த்து பிய்த்து கிருமி தாக்குதல், மறையா வடு இவற்றினை ஏற்படுத்தி விடுவர்.

    * வலி இருந்தால் அதன் மீது ஐஸ் வையுங்கள். சரும மருத்துவர் உதவி பெறுங்கள். முகத்தினை வலிய கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது சுகாதாரமே. மேலும் பருக்களின் மீது நகம் படுவதும் ஆபத்தானதே.

    * இம்மாதிரி முகத்தில் பருக்கள், கட்டிகள் வருவதற்கு சில காரணங்களில் ஒன்று அவர்களது கை குட்டைகள், துண்டுகள்தான் இவை சுகாதாரமற்று, துவைக்காமல் அழுக்காக இருப்பதுதான். பல நாட்கள் அதே கைக்குட்டை, துண்டினை உபயோகிப்பது நோயினை ஓடி சென்று வரவழைப்பதாகும். வியர்வை, அழுக்கு போன்றவை துண்டு, கை குட்டைகளில் படிவதால் இதனை அன்றாடம் முறையாய் சுத்தம் செய்வது அவசியம்.

    இதே போன்று படுக்கை விரிப்பு, தலையணை உரைகளை மாதக் கணக்கில் துவைக்காமல் இருந்தால் அநேக கிருமிகளின் நிரந்தர உறைவிடமே மனித உடல்தான் என்றாகி விடும். படுக்கை விரிப்புகளை அடிக்கடி துவைப்பதே சிறந்தது.

    * சிலர் காதினை சுத்தம் செய்கின்றேன் என்கிற பெயரில் பல கூரிய ஆயுதங்களை உபயோகிப்பது வழக்கம். இதனால் ஏற்படும் பாதிப்பில் யாரும் அக்கறை கொள்வதில்லை. காதில் நிரந்தர பாதிப்புகள் ஏற்படலாம்.

    ஆகவே முதலில் இப்பழக்கத்தினை கை விடுங்கள். பஞ்சு கொண்ட குச்சியாக இருந்தாலும் அதனை தொண்டை வரை உள் விட்டு உள்காதை தேய் தேய் என தேய்த்து சுத்தம் செய்ய வேண்டாம். உள் காதில் புண், பாதிப்பு என பல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். மேலும் காதில் உள் உள்ள கீகிஙீ மேலும் உள் தள்ளப்படலாம். பஞ்சு உள்ளே சிக்கிக் கொள்ளலாம். உள் அழுக்கினை நீக்க மருத்துவர் மருந்தினை சிபாரிசு செய்வார். அதனையே பயன்படுத்தவும்.

    * அன்றாடம் பள்ளிக்கு, அலவலகத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வது பலரின் வழக்கம். இது நல்லதே. ஆனால் அதனை சுத்தமே செய்யாமல் தொடர்ந்து அந்த பாட்டிலிலேயே தண்ணீர் கொண்டு செல்வது பல வைரஸ் கிருமிகளை கொண்டு வந்து சேர்க்கும். தண்ணீர் பாட்டிலை சுத்தமாக சோப்பு கொண்டு கழுவுவது மிக முக்கியம்.

    * இருமல், சளி இருக்கும்போது அடுத்தவர் முகத்துக்கு நேரே இருமவோ, தும்மவோ செய்வது தவறு. எளிதாக அனைவருக்கும் நோயினை தானம் செய்து விடுகின்றீர்கள். கை குட்டை, டிஷ்யூ இவற்றினை பயன்படுத்துங்கள். இது நமது கடமையாகும்.



    * அதிக நேரம் ஷவரில், சுடுநீரில் நின்று கொண்டே இருக்காதீர்கள். உடலிலுள்ள இயற்கை எண்ணை பசையினை நீக்கி சருமத்தினை வறண்டு விடச் செய்யும். தோல் வயதானவர் போல் தோற்றமளிக்கும்.

    * சாப்பிட்டவுடன் பற்களை நன்கு சுத்தம் செய்யுங்கள். இது ஆரோக்கியம் மற்றும் நாகரீகமும் கூட. வைட்டமின் பி12 பற்றாக்குறை உள்ளதைக் கூறும் அறிகுறிகள். பொதுவில் சாதாரண மறதி. வெளிர்ந்த தோல் இவைகளை பி12 குறைபாடு என எளிதில் கூறி விடுவர்.

    வைட்டமின் பி- பிரிவில் 8 வகை உள்ளன. அவை அனைத்தும் உடலுக்கு உணவிலிருந்து சக்தி கிடைக்க உதவுபவை. ஞிழிகி, ஆரோக்கிய நரம்பு, ரத்த செல்கள் இவற்றுக்கு பி12 மிகவும் அவசியமானது. ரத்த சோகையினைத் தவிர்க்கின்றது. இதன் குறைபாடு காட்டும் சில அறிகுறிகளைப் பார்ப்போம்.

    * கை, பாதம் இவை மரத்து போவது, ஒருவித குறுகுறுப்பு உணர்வு இருப்பது, சிறு சிறு ஊசி குத்தல்கள் போல் உணர்வது போன்ற அறிகுறிகள் இருக்கும்.

    * அடிக்கடி சோர்ந்து போவது, பலவீனமாக உணர்வது
    * வெளிரிய சருமம்
    * சைவ உணவு மட்டுமே உட்கொள்பவர்கள்
    * நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்கள்
    * நெஞ்செரிச்சல் மருந்து அடிக்கடி எடுத்துக் கொள்பவர்கள்
    * அதிக மன உளைச்சல்
    * அதிக மறதி
    * வயது 50-க்கும் மேல்

    மருத்துவர் ரத்த பரிசோதனை மூலம் குறைபாட்டினை உறுதி செய்து அதற்கான சத்து மாத்திரைகளைத் தருவார். சுயமாக தானே எந்த மருந்து, சத்து மாத்திரையினையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதனை நினைவில் கொள்க.

    மேலும் காரணமின்றி முடி கொட்டுதல், இளநரை, வாயு புண் இவைகள் ஏற்படும் பொழுதும் வைட்டமின் பி12 பற்றி மருத்துவ ஆலோசனைப் பெற வேண்டும்.
    வயது கூடும்பொழுது நமது உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இளம் வயதில் இருந்த ஒரு வேகம் இருப்பதில்லை. பல உணவுகள் வயது கூடும்பொழுது ஒத்துக் கொள்வதில்லை. சிலரது வாழ்க்கை, உணவு முறை மாறுதல்களின் மூலம் வயது கூடும்பொழுது ஏற்படும் மாறுதல்களை குறைத்துக் கொள்ள முடியும்.

    * வயது கூடும்பொழுது பலருக்கு சர்க்கரை நோய் பிரிவு 2 தாக்குதல் எளிதில் ஏற்படுகின்றது. அனைவரும் அன்றாடம்? கப் அளவு பீன்ஸ், மொச்சை, பருப்பு வகைகள் இவைகளை சேர்த்து வந்தால் கெட்ட கொழுப்பு குறைவதுடன் சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்க உதவுகின்றது.



    * வயது கூடும்பொழுது இருதயநோய் பாதிப்புகள் எளிதில் ஏற்படுகின்றது. ஒருவேளையாவது ஓட்ஸ் எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. இதில் உள்ள நார்ச்சத்து கொழுப்பு குறைய பெரிதும் உதவுகின்றது.

    * அந்த காலம் முதல் சிபாரிசு செய்யப்படும் ஆப்பிள் எந்த காலத்திலும் சிறந்த உணவு பொருளாகவே இருக்கும். இதிலுள்ள நார்சத்து கொலஸ்டிராலினை குறைக்கும். மேலும் வைட்டமின் சி, பொட்டாசியம் என பல சத்துக்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இதற்கு அதிகம்.

    * பாதம், பிஸ்தா, ஆக்ரூட், முந்திரிகொட்டை வகைகள். இந்த கொட்டைகள் கலவை ஒரு அவுன்ஸ் அன்றாடம் எடுத்துக் கொள்வது மாரடைப்பு, பக்கவாதம் இவற்றினை 28 சதவீதம் வரை குறைக்கின்றது என ஆய்வுகள் கூறுகின்றன.

    சிறிதளவு வேர்கடலை கூட சிறந்ததுதான். எதையும் வறுத்து, பொரித்து, உப்பு போட்டு சாப்பிடுவது என்பது தீங்கே. ஆகவே சுவையினை இங்கு தவிர்த்து கைப்பிடி கலவை கொட்டைகளை அன்றாடம் எடுத்துக் கொள்ளுங்கள்.

    * மூளைக்கும் சக்தி வேண்டாமா? இங்குதான் கீரை வகைகளை முக்கியமாக குறிப்பிட வேண்டும். அடிக்கடி கீரை உணவினை சேர்த்து வருபவர்களுக்கு மூளையின் செயல்பாட்டுத் திறன் சிறந்து விளங்குவதாக கூறப்படுகின்றது. இருப்பினும் ஏதேனும் உடல்நல பாதிப்பு இருந்தால் உணவு முறை, கீரைகளை உணவில் சேர்த்தல் இவைகளைப் பற்றி மருத்துவரின் ஆலோசனைப் பெற்று அதனை கடைபிடிக்க வேண்டும்.

    * உங்கள் உடல் தசைகள் வலுவோடு இருக்க வேண்டுமா? உடலுக்கு தேவையான புரதம் கிடைக்க வேண்டும். பல பொருட்களை புரதம் கிடைக்க வேண்டி நாம் எடுத்துக் கொள்கிறோம். அதிக கொழுப்பு இல்லாத தயிர் ஒரு கப் அளவு அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. மேலும் இதில் உள்ள கால்சியம் நம் எலும்புகளின் ஆரோக்கியத்தினை காக்கும்.

    கேரட்: இது உடலின் ஒவ்வொரு உறுப்பிற்கும் நலத்தினை அளிக்கக் கூடியது. கண்கள், வாய், சருமம், இருதயம் என சொல்லிக் கொண்டே போகலாம். கேரட் ரத்தக் கொதிப்பினைக் குறைக்கும். கெட்ட கொழுப்பினை குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டும். ஜீரண சக்திக்கு உதவும். இருதய நோய் பாதிப்புகளை குறைக்கும். புற்றுநோய் பாதிப்பினை வெகுவாக குறைக்கும்.

    இதில் உள்ள நார்சத்து, வைட்டமின்கள் ஏ, பி8, சி, ஈ., கே. மற்றும் தாது உப்புக்கள் இரும்பு, பொட்டாசியம், காப்பர், மக்னீஸ், பீட்டா கேரோட்டின் மற்றும் பல பிரிவான நோய் எதிர்ப்பு சக்தி இவை கேரட்டினை மிக முக்கியமான உணவாக்கி விடுகின்றது.

    பீட்ரூட்: கேரட் போன்ற மற்றொரு உணவு பீட்ரூட் புற்று நோயை தவிர்க்க, மறதி நீக்க, உயர் ரத்த அழுத்தம் குறைய என பீட்ரூட்டின் நன்மைகள் ஏராளம்.

    * அடர்ந்த சாக்லேட்டில் 70 சதவீதம் கோகோ இருப்பதால் தினமும் ஒரு துண்டு அடர்ந்த சாக்லேட் எடுத்துக் கொள்ளலாம்.

    மேற்கூறியவைகளை ஆரோக்கிய வாழ்வின் ஒரு பகுதி என்பதனை அறிந்து பின்பற்றுவோம்.
    Next Story
    ×