என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சரியான உணவு முறையை பின்பற்றுங்கள்
Byமாலை மலர்10 Jan 2019 3:02 AM GMT (Updated: 10 Jan 2019 3:02 AM GMT)
இன்று ஞாயிற்றுக்கிழமை. என் மனம்போல் சாப்பிடுவேன், மது அருந்துவேன், படுக்கையை விட்டு எழ மாட்டேன் எனச்சொல்லி அந்த வாரம் முழுவதும் ஒழுங்காக வாழ்ந்த முறையினை கெடுத்துக் கொள்ளக்கூடாது.
உங்களுக்கு இதுதான் சரியான உணவு முறை என்பதனை நன்கு தெரிந்துகொண்டு அதனை பின்பற்றுங்கள்.
காலை வெய்யிலில் குறைந்தது 7 நிமிடமாவது நடங்கள்.
இன்று ஞாயிற்றுக்கிழமை. என் மனம்போல் சாப்பிடுவேன், மது அருந்துவேன், படுக்கையை விட்டு எழ மாட்டேன் எனச்சொல்லி அந்த வாரம் முழுவதும் ஒழுங்காக வாழ்ந்த முறையினை கெடுத்துக் கொள்ளக்கூடாது.
24 மணிநேரமும் ‘பிஸி’ என்ற வார்த்தை வேண்டாம். தினமும் ஒரு மணிநேரம் உங்களுக்காக ஓய்வாக மன மாறுதலாக எடுத்துக் கொள்வோம்.
உடற்பயிற்சியோ, யோகாவோ புதிய பயிற்சி ஒன்றினை கற்றுக் கொள்வோமே.
நல்ல திறமைதான். இருப்பினும் நம் மீது நமக்கே நம்பிக்கை இல்லாது ‘நான் எடை அதிகம்’ எனக்கு எதுவும் திறமையாக செய்ய இயலாது’ போன்ற தன்னம்பிக்கை அற்ற வார்த்தைகளை நீக்கிவிட்டு தன்னம்பிக்கை உடையவராக மாறுவோம். மனஉளைச்சல் இன்றி இருப்போம்.
தினமும் 20 நிமிட தியானம் நாம் பழகிவிட்டோமா! இல்லையெனில் பழகிக்கொள்வோம், எந்த ஒரு விஷயத்திலும் அதிகபட்சம் 5 நிமிடத்திற்குள் நம் டென்ஷனை கட்டுப்படுத்தி இயல்பாய் செயல்படுவோம். சின்ன எடைதூக்கும் (2கி) பயிற்சியினை தகுந்த அறிவுரையோடு மேற்கொள்வோமா!
வீட்டினை ஆரோக்கியமாய் வைக்க மேலும் ஒரு முயற்சியினை செய்வோம். மூங்கில் செடி, சோற்றுகற்றாழை செடி வளர்ப்போம்.
நம்மை விடாதிருக்கும் ஒரு கெட்ட பழக்கத்திலிருந்து உறுதியாய் முனைந்து வெளிவந்து விடுவோமே, (உ.ம்) அதிக காபி, மது, கடுமையான வார்த்தைகள்.
வீட்டில் காய்கறிகள், பழம், பொருட்கள், சமைத்த உணவு வீணாவதினை தவிர்ப்போம்.
வீட்டில் இருப்பவர்களை நன்கு கவனித்து தன்னை மெழுகுவர்த்தியாக மாற்றிக்கொள்வது தேவையற்றது. நம்மையும், நம் உடல்நலனையும் நன்கு கவனித்துக் கொள்வோம்.
உங்கள் நேரம் மற்றவர் முன்னேற்றத்திற்காக, உங்கள் அன்றாட முழு நேரத்தினையும் தானம் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. ஆகவே தன்னையும் காத்து, பிறருக்கும் உதவியாய் இருப்பவரே சரியான பாதையில் செல்பவர். நாம் சரியான பாதையில் செல்வோமே.
எப்பொழுதும் செல்போனில் பேசுவதும், படிப்பதும் என இருப்பவர்களின் ஆரோக்கியம் கெடுகின்றது என கூறுகின்றனர். இந்த பழக்கம் நமக்கு வேண்டாமே.
காலை வெய்யிலில் குறைந்தது 7 நிமிடமாவது நடங்கள்.
இன்று ஞாயிற்றுக்கிழமை. என் மனம்போல் சாப்பிடுவேன், மது அருந்துவேன், படுக்கையை விட்டு எழ மாட்டேன் எனச்சொல்லி அந்த வாரம் முழுவதும் ஒழுங்காக வாழ்ந்த முறையினை கெடுத்துக் கொள்ளக்கூடாது.
24 மணிநேரமும் ‘பிஸி’ என்ற வார்த்தை வேண்டாம். தினமும் ஒரு மணிநேரம் உங்களுக்காக ஓய்வாக மன மாறுதலாக எடுத்துக் கொள்வோம்.
உடற்பயிற்சியோ, யோகாவோ புதிய பயிற்சி ஒன்றினை கற்றுக் கொள்வோமே.
நல்ல திறமைதான். இருப்பினும் நம் மீது நமக்கே நம்பிக்கை இல்லாது ‘நான் எடை அதிகம்’ எனக்கு எதுவும் திறமையாக செய்ய இயலாது’ போன்ற தன்னம்பிக்கை அற்ற வார்த்தைகளை நீக்கிவிட்டு தன்னம்பிக்கை உடையவராக மாறுவோம். மனஉளைச்சல் இன்றி இருப்போம்.
தினமும் 20 நிமிட தியானம் நாம் பழகிவிட்டோமா! இல்லையெனில் பழகிக்கொள்வோம், எந்த ஒரு விஷயத்திலும் அதிகபட்சம் 5 நிமிடத்திற்குள் நம் டென்ஷனை கட்டுப்படுத்தி இயல்பாய் செயல்படுவோம். சின்ன எடைதூக்கும் (2கி) பயிற்சியினை தகுந்த அறிவுரையோடு மேற்கொள்வோமா!
வீட்டினை ஆரோக்கியமாய் வைக்க மேலும் ஒரு முயற்சியினை செய்வோம். மூங்கில் செடி, சோற்றுகற்றாழை செடி வளர்ப்போம்.
நம்மை விடாதிருக்கும் ஒரு கெட்ட பழக்கத்திலிருந்து உறுதியாய் முனைந்து வெளிவந்து விடுவோமே, (உ.ம்) அதிக காபி, மது, கடுமையான வார்த்தைகள்.
வீட்டில் காய்கறிகள், பழம், பொருட்கள், சமைத்த உணவு வீணாவதினை தவிர்ப்போம்.
வீட்டில் இருப்பவர்களை நன்கு கவனித்து தன்னை மெழுகுவர்த்தியாக மாற்றிக்கொள்வது தேவையற்றது. நம்மையும், நம் உடல்நலனையும் நன்கு கவனித்துக் கொள்வோம்.
உங்கள் நேரம் மற்றவர் முன்னேற்றத்திற்காக, உங்கள் அன்றாட முழு நேரத்தினையும் தானம் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. ஆகவே தன்னையும் காத்து, பிறருக்கும் உதவியாய் இருப்பவரே சரியான பாதையில் செல்பவர். நாம் சரியான பாதையில் செல்வோமே.
எப்பொழுதும் செல்போனில் பேசுவதும், படிப்பதும் என இருப்பவர்களின் ஆரோக்கியம் கெடுகின்றது என கூறுகின்றனர். இந்த பழக்கம் நமக்கு வேண்டாமே.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X