search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பன்றிக்காய்ச்சலை குணப்படுத்தும் ஓமியோபதி மருந்து
    X

    பன்றிக்காய்ச்சலை குணப்படுத்தும் ஓமியோபதி மருந்து

    அறிவியல் பூர்வமாகவே ஓமியோபதி ஆற்றல்மிகு மருந்தாகும். உலகெங்கும் பல கோடி மக்கள் ஓமியோபதி மருந்தால் பயனடைந்து வருகிறார்கள்.
    ஜெர்மனியை சேர்ந்த டாக்டர் சாமுவேல் ஹானிமென் என்பவரால் ஓமியோபதி மருத்துவம் உருவாக்கப்பட்டது. உலகமெங்கும் கோடிக்கணக்கான மக்கள் ஓமியோபதி மருத்துவத்தை பயன்படுத்தி வருகிறார்கள். பன்றி காய்ச்சல் என்கிற ஸ்வின்புளு என்பது சுவாச நோயாகும். வைரஸ் என்கிற நோய் நுண் கிருமிகள் சுவாச மண்டலத்தை தொற்றுகிறது.

    ஸ்வின் இன்புளுன்சா வைரஸ் குடும்பத்தில் உள்ள பலவிதமான இன்புளுன்சா வைரஸ்கள் சுவாச உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஸ்வின் இன்புளுன்சா வைரஸ் நோய் நுண்கிருமிகள் பன்றிகளை இருப்பிடமாக கொண்டுள்ளன. இந்த வைரஸ்கள் பல அணுமானத்தில் இருந்தபோதிலும் முக்கிய இன்புளுன்சாவான சி அதன் துணை இன்புளுன்சா ஏ இவற்றை எச்1என்1, எச்1என்2, எச்2என்1, எச்3என்2, எச்2என்3 என்று அறியப்படுகிறது.

    பன்றிக்காய்ச்சலுக்கு காரணம் இன்புளுன்சா ஏ வைரசின் வரையறுக்கப்பட்டது எச்1என்1. இவை ஏன் எச்1என்1 என்று அழைக்கப்படுகிறது என்றால் இரண்டு பெரிய ஆன்டிஜன் இந்த வைரசின் மேல் காணப்படுகிறது. அவை ஹீம்அக்லுடினின் (எச்), மற்றொன்று நியூராமினிடேஸ்(என்).

    இந்த வைரசால் 65 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள், குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், நாள்பட்ட ஆஸ்துமா, சர்க்கரை நோயாளிகள், இதய நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதாரண சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஏற்படும் இன்புளுயன்சா காய்ச்சல் போலவே சோர்வு, காய்ச்சல், பசியின்மை, தும்மல், இருமல், மூக்கில் நீர்வடிதல், தொண்டைவலி, தலைவலி, உடல்வலி மற்றும் இருமல் ஏற்படும். சிலருக்கு கடுமையான மூச்சு திணறல், மூச்சடைப்பு ஏற்படும். சிலருக்கு வலிப்பு உண்டாகும். நுரையீரல் கடுமையாக தொற்று கிருமியால் பாதிக்கப்படும்போது தவிர்க்க முடியாத மரணம் ஏற்படும்.

    சீதோஷ்ணநிலை மற்றும் தட்பவெப்பம் மாற்றத்தினால் ஸ்வின்புளு, பன்றிக்காய்ச்சல் ஏற்படுகிறது. கூட்ட நெரிசல் நோய் தொற்றும் வேகத்தை அதிகப்படுத்தும். கூட்டநெரிசல் இடங்களில் நோய் பாதிப்பின் அளவு அதிகமாக இருக்கும். மனிதனுக்கு சுவாச சம்பந்தமான தும்மல், இருமல், தொற்றுநோய்க்குள்ளான பொருட்களை தொடுவதால் மூக்கு, கண், வாய் இவற்றை வைரஸ் தொற்று ஏற்பட்ட கைகளால் தொடுவதால் அடுத்தவர்களுக்கு தொற்று ஏற்படுகிறது. சுவாச உறுப்புகளின் மூலமாக ஸ்வின்புளு இன்புளுன்சா வைரஸ் மனிதனின் உடலை வந்து சேர்கிறது.

    நோய் வராமல் தடுப்பதற்கு பொதுஇடங்களில் ஜன்னல், கதவுகளை திறந்து காற்றோட்டமாக வைக்க வேண்டும். பொது கூட்டங்களை தவிர்க்க வேண்டும். இன்புளுன்சா பாதிக்கப்பட்டவர்கள் மாஸ்க் எனும் முகமூடியை அணிந்து, கைக்குட்டையை கொண்டு மூக்கு, வாயை பொத்திக்கொள்ள வேண்டும். இருமல், சளி, தும்மல், களைப்பு போன்ற ஆரம்ப அறிகுறிகள் தோன்றும்போது தனி அறையில் நன்கு ஓய்வெடுக்க வேண்டும். வெளியில் நடமாடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். டாக்டரை உடனடியாக அணுக வேண்டும்.

    கை, முகத்தை அடிக்கடி சோப்பு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக இருமல், தும்மல் ஏற்பட்டவுடன் சோப்பு தண்ணீரில் கை மற்றும் முகத்தை வெந்நீரில் கழுவ வேண்டும்.ஓமியோபதி மருந்துகளை கொண்டு ஸ்வின்புளு என்கிற வைரஸ் இன்புளுன்சாவான பன்றிக்காய்ச்சலை வரும்முன் தடுக்கலாம். ஸ்வின்புளு மட்டும் இல்லாமல் இதுபோன்ற பிற எபிடெமிக் காய்ச்சலையும் (மலேரியா, டெங்கு), ஓமியோபதி ஜீனஸ் எபிடெமிகஸ் மருந்தை கொண்டு பெருவாரியான ஒரே மாதிரியான நோய் குறிகளை கொண்டுள்ள மக்களை நோயின்றி காப்பாற்றலாம்.

    இந்த குறிப்பிட்ட ஒத்த குறிகளை கொண்ட மருந்தை ‘ஜீனஸ் எபிடெமிக்கஸ்’ என்று ஓமியோபதி வைத்திய சாஸ்திரம் கூறுகிறது. இப்படி தேர்வு செய்யப்படும் ஓமியோபதி ஜீனஸ் எபிடெமிக்கஸ் மருந்தை கொண்டு ஆரோக்கியமான மனிதர்களுக்கு கொடுத்து வருமுன்னர் தடுக்கலாம். அறிவியல் பூர்வமாகவே ஓமியோபதி ஆற்றல்மிகு மருந்தாகும். உலகெங்கும் பல கோடி மக்கள் ஓமியோபதி மருந்தால் பயனடைந்து வருகிறார்கள்.

    ஓமியோபதி மருந்தால் பின்விளைவுகள் துளியும் ஏற்படாது. பாதுகாப்பான மருந்துகள், வேறு நோய்களுக்கு ஆங்கில மருந்துகள் உட்கொண்டாலும் ஓமியோபதி மருந்துகளை பயன்படுத்தலாம். ஆங்கில மருந்துக்கும், ஓமியோபதி மருந்துக்கும் முரண்பாடு ஏற்படாது. ஓமியோபதி மருந்துகள் எதிர்ப்பு சக்தியும், பலத்தையும் கொடுத்து காய்ச்சலை குறைப்பதோடு, பசியை ஏற்படுத்தும். ஓமியோபதி மருந்துகள் பாதுகாப்பானவை. எல்லா வயதினரும் கை குழந்தைகள் உள்பட அனைவரும் பயன்படுத்தலாம். கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் பயன்படுத்தலாம்.

    ஓமியோபதியில் இன்புளுன்சா எனும் புளு காய்ச்சலை குணப்படுத்த பொதுவாக 132 மருந்துகள் உள்ளன. இருப்பினும் நோய் அறிகுறிகளை கருத்தில் கொண்டு ஆராய்ந்து நடைமுறையில் உள்ள புளு நோயாளியின் அறிகுறிகளை கருத்தில் கொண்டு சரியான ஒத்த ஓமியோபதி ஜீனஸ் எபிடெமிக்கஸ் புளு மருந்தை ஓமியோபதி டாக்டர் தேர்வு செய்து கொடுப்பார். அப்படி தேர்வு செய்யப்பட்ட மருந்தை அதே பகுதியில் அதே அறிகுறிகளோடு கூடிய புளு நோயாளிகளை கண்டறிந்து ஓமியோபதி ஜீனஸ் எபிடெமிக்கஸ் மருந்தை கொடுத்தால் புளு குணமாகும். ஆரோக்கியமான மனிதர்களுக்கு கொடுத்து இன்புளுன்சா எனும் ஸ்வின்புளு என்ற பன்றி காய்ச்சலை தடுக்கலாம், குணப்படுத்தலாம்.

    தமிழ்நாடு அரசு ஓமியோபதி கவுன்சிலில் பதிவு பெற்ற ஓமியோபதி டாக்டர்களின் ஆலோசனையில்லாமல் மருந்து கடைகளில் தானாகவே ஸ்வின்புளு பன்றிக்காய்ச்சல் மருந்து வாங்கி உபயோகிக்க வேண்டாம்.

    டாக்டர் கே.கிங் (ஓமியோ),

    தமிழ்நாடு அரசு ஓமியோபதி துறை முன்னாள் கவுரவ ஆலோசகர்
    Next Story
    ×