search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெயில் காலத்தில் சர்க்கரை நோயாளிகளின் பாதுகாப்பு முறைகள்
    X

    வெயில் காலத்தில் சர்க்கரை நோயாளிகளின் பாதுகாப்பு முறைகள்

    கோடையில் சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்கள் சில பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டால் கோடையும் வசந்தம் தான். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    இப்பொழுது வெயில் காலம் ஏற்பட்டுவிட்டது. இதில் அதிக வியர்வை வெளியேறும் பொழுது உடலில் நீர்சத்து குறையலாம். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிவிடும். இதனால் அடிக்கடி சிறுநீர் செல்ல நேரிடும் இது மேலும் நீரின் அளவினை உடலில் குறைக்கும்.

    அதிக சூடு இல்லாமல் இருக்க உங்களை வீட்டுக்குள்ளேயே அடையச் செய்யக்கூடாது. காலை, மாலைகளில் வெளியே வாருங்கள். நடை பயிற்சி செய்யுங்கள். இன்சுலின், மருந்து இவை அதிக உஷ்ணம், உரையும் குளிர் இரண்டிலும் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு என்பதை அறியுங்கள். ஆகவே மருந்துகளை பாதுகாப்பாக வையுங்கள்.

    * நன்கு தண்ணீர் குடியுங்கள். கை அருகிலேயே தண்ணீர் பாட்டில் இருக்கட்டும். அடிக்கடி சிறிது நீர் குடியுங்கள்.

    * வெயில் காலம் என்பதால் உங்கள் சர்க்கரை அளவினை வீட்டிலேயே அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளுங்கள். அதன்படி இன்சுலின் உபயோகப்படுத்துங்கள். (இன்சுலின் உபயோகிப்பவர்களுக்கு மட்டும்)

    * மருந்து கைவசம் கை பையில் இருக்கட்டும்.
    * சிறிய உணவு கைவசம் இருக்கட்டும்.
    * தலை தொப்பி, கறுப்பு கண்ணாடி இவை வெளியில் செல்லும்பொழுது அவசியம் அணியுங்கள்.
    * வெயில் உங்கள் சருமத்தினை எரிக்காத வகையில் தகுந்த பருத்தி ஆடைகளை உடலை மூடி அணிந்து கொள்ளுங்கள்.

    அவ்வளவு தான். கோடையில் சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்கள் இந்த பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டால் கோடையும் வசந்தம் தான்.
    மூட்டு வலி என்பது நம் வீட்டில் பலரிடம் நாம் கேட்கும் மிக சாதாரண வார்த்தை ஆகிவிட்டது. ஆர்த்லைட்டிஸ் என்ற இந்த வார்த்தைக்கு கீழ் 100 வகை பிரிவுகள் இருக்கின்றன.

    இந்த மூட்டு வலிக்கு கிருமி தாக்குதல், புகை பிடித்தல், முன்பு ஏற்பட்ட அடி, பரம்பரை உடலில் அதிக எடை என பல காரணங்கள் இருக்கக் கூடும். பல காரணங்களின் சேர்க்கையாகவும் இருக்கக் கூடும்.

    ஆனால் நமது வாழ்க்கை முறை மூட்டுவலி தவிர்க்கப்பட உதவும், பாதிப்பு  ஏற்பட்டால் மறு வாழ்க்கை முறைதான் கூடவோ, குறையவோ காரணமாக அமையும்.

    மூட்டு வலி எனும் பொழுது வலி வீக்கம், மூட்டுக்களை அசைப்பதில் கடினம் என இருக்கும். ஆக வரும் முன் காப்பதே எதிலும் சிறந்த பாதுகாப்பாக அமையும்.

    * உடற்பயிற்சி: இன்னமும் இதனை கடை பிடிக்காத மக்கள் கோடானு கோடி உள்ளனர். உடற்பயிற்சி உடல் நலன், மன நலனைக்காக்கும். என்பதோடு மூட்டு பாதுகாப்பிற்காக  ஆலோசனை பெற்று செய்யும் பயிற்சிகள் வெகுவான பலனை அளிக்கின்றது என ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

    * மருத்துவர்களை தவிர்த்தல்: பலர் மருத்துவர்களை சந்திப்பது என்றாலே அஞ்சுவர். கையில் கிடைக்கும் மாத்திரையினை எடுத்துக் கொண்டு பிரச்சினைகளை பெரிதாக்கிக் கொள்வர்.

    கோடை காலத்தில் கடற்கரை பகுதிக்கு அருகில் இருப்பவர்களுக்கு வெயிலும், பிசுபிசு வென்ற உணர்வும் வியர்வையும், காற்றின் ஈரப்பதத்தில் மாறுதலும் இருப்பதால் மூட்டு வலி பாதிப்புடையவர்கள் தனக்கு  பாதிப்பு கூடுதலாக இருக்கிறதென்றே சொல்வார்கள். பொதுவில் மிதான உஷ்ணம் மூட்டு வலி பாதிப்பு உடையவர்களுக்கு குறைந்த வலியினையே கொடுக்கும்.

    என்றாலும் மேற் கூறப்பட்டுள்ள காரணங்களால் இவர்கள் வலி கூடுவது போல் உணரலாம். அதிக வெய்யில் நேரத்தில் வீட்டுக்குள் இருத்தலும் காலை, மாலை நேர உடற் பயிற்சி, தேவையான அளவு நீர் குடித்தல், மருத்துவர் அளித்த மருந்து இவை மூட்டுவலி குறைய கண்டிப்பாய் உதவும்.

    Next Story
    ×