search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மலச்சிக்கலை ஏற்படுத்தும் நூடுல்ஸ்
    X

    மலச்சிக்கலை ஏற்படுத்தும் நூடுல்ஸ்

    ஒருவர் நூடுல்சை அடிக்கடி சாப்பிட்டால், அது மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு, அதை தீவிரமாக்கி, நீண்ட நேரம் மலக்குடலில் மலத்தை தேக்கி வைத்து, நோயை தீவிரப்படுத்தும்.
    தற்போது பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஒரு பாஸ்ட்புட் தான் நூடுல்ஸ். இதை பலர் ஸ்நாக்ஸ் நேரத்தில் மட்டுமின்றி, காலை உணவாகவும் இரவு உணவாகவும் உட்கொள்கின்றனர். இதை பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் அதிகமாக சாப்பிடுகிறார்கள். சொல்லப்போனால் இன்றைய காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை விட ஜங்க் உணவுகளைத் தான் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். 

    ஆகவே பெற்றோர்களும், குழந்தை விரும்பி சாப்பிடுகிறது என்று அடிக்கடி வாங்கி கொடுக்கிறார்கள். இது தான் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. பதப்படுத்தப்பட்ட உணவான நூடுல்ஸ் உடல் பருமனை உண்டாக்கும். இதில் நார்ச்சத்துகளும், புரோட்டீனும் குறைவு என்பதால், இது எடையைக் குறைக்க சிறந்த உணவுப்பொருள் அல்ல. 

    அப்படியே சாப்பிட்டாலும், பசியை இன்னும் அதிகரித்து, உடல் பருமனுக்கு வழிவகுக்கும். ஆய்வில், வாரத்துக்கு 2 முறை இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிடுபவர்களுக்கு, இதை சாப்பிடாமல் இருப்பவர்களை விட வளர்சிதை மாற்ற நோய் அபாயம் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. மைதாவால் ஆனது தான் நூடுல்ஸ். இது ஆரோக்கியத்துக்கு மிகவும் மோசமானது. ஏனெனில் இதில் சத்துகள் குறைவு மட்டுமின்றி, அதிகமாக பதப்படுத்தப்பட்டிருப்பதோடு, பிளேவர்களும் நிறைந்தது.



    நூடுல்சில் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அல்லது ட்ரான்ஸ் கொழுப்புகள் ஏராளமாக நிறைந்துள்ளன. மேலும் இதில் எடிபிள் வெஜிடபிள் ஆயில், சர்க்கரை, சர்க்கரை சிரப், பிளேவர் மற்றும் இதர ஆரோக்கியத்தை பாழாக்கும் ஏஜென்டுகள் அடங்கியுள்ளன. நூடுல்சில் மோனோசோடியம் க்ளுட்டமேட் என்னும் அடிமையாக்கும் பிளேவர்கள் நிறைந்துள்ளன. இத்தகைய நூடுல்சை ஒருவர் உட்கொண்டால், அது உடல் பருமன், உயர் ரத்தஅழுத்தம், தலைவலி, குமட்டல் போன்றவற்றை உண்டாக்கும்.

    டயட்டில் இருப்பவர்கள் நூடுல்சை சேர்த்துக் கொண்டால், அந்த டயட்டையே தரமற்றதாக்கிவிடும். சத்துகள் இல்லாத நூடுல்சை ஒருவர் உட்கொண்டால், அது ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டாக்கிவிடும். நூடுல்சில் சோடியம் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இத்தகைய நூடுல்சை ஒருவர் அடிக்கடி உட்கொண்டால், அது ரத்த அழுத்த பிரச்சினைகளை உண்டாக்குவதோடு, இதய நோய்க்கும் வழிவகுக்கும்.

    நூடுல்சை குழந்தைகள் அதிகம் உட்கொண்டால், அது அவர்களது உடலில் மற்ற உணவுகளால் கிடைக்கும் சத்துகளை உறிஞ்சும் திறனைக் குறைத்துவிடும். இதன் விளைவாக குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட நேரிடும். கர்ப்பிணிகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளான நூடுல்சை உட்கொண்டால், அது கருச்சிதைவு உண்டாக்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் நூடுல்சில் உள்ள உட்பொருட்கள், வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    ஒருவர் நூடுல்சை அடிக்கடி சாப்பிட்டால், அது மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு, அதை தீவிரமாக்கி, நீண்ட நேரம் மலக்குடலில் மலத்தை தேக்கி வைத்து, நோயை தீவிரப்படுத்தும். எனவே, நூடுல்சைத் தவிர்த்து, ஆவியில் வேக வைக்கும் இடியாப்பத்தை சாப்பிட குழந்தைகளை பழக்கப்படுத்துவது நல்லது.
    Next Story
    ×