search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நோய் தீர்க்கும் முத்திரை
    X

    நோய் தீர்க்கும் முத்திரை

    உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள், காலையில் மறவாமல் கை தட்டினால் போதும். அதைப் போலவே முத்திரைகள். இந்த முத்திரைகள், எத்தனையோ நோய்களுக்கு தீர்வு சொல்கின்றது.
    உள்ளங்கையில் தான் எல்லா உறுப்புகளுக்கும் ஆதாரப் புள்ளி உள்ளது. வண்டிக்கு அச்சாணி மாதிரி, அதிகாலையில் 10 தடவை கை தட்டினால் அனைத்து நரம்புகளும் நல்ல முறையில் செயல்படும். ஒரு நாள் முழுவதும் உற்சாகம் இருக்கும். பொதுவாக ஒருநகைச் சுவைப்படம் பார்க்கும் பொழுது கைதட்டிச் சிரித்துப் பார்க்கிறோம் அல்லவா? அப்பொழுது நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாக இயங்குவதாகவும், ரத்த ஓட்டம் சீராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    கை தட்டுவது ஒரு உடற்பயிற்சி. உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள், காலையில் மறவாமல் கை தட்டினால் போதும். அதைப் போலவே முத்திரைகள். இந்த முத்திரைகள், எத்தனையோ நோய்களுக்கு தீர்வு சொல்கின்றது. நீரழிவு நோயில் இருந்து நிம்மதி கிடைக்க உதவுகிறது.

    சிறுநீரகத்தை வலுப்படுத்துவதற்கு கூட முத்திரை உள்ளது. நடுவிரலும், மோதிர விரலும் சேர்ந்து பெருவிரலைத் தொட வேண்டும். ஆட்காட்டி விரலையும், சுண்டு விரலையும் உயர்த்தி வைக்கவேண்டும். இந்த முத்திரை காதைத் தூக்கி இருக்கும் நாயைப் போல இருக்கவேண்டும். இதன் பலன் சிறுநீரகத்தை வலுப்படுத்தும். நீரழிவு நோயினால் ஏற்படும் தொல்லைகளைப் போக்கும்.
    Next Story
    ×