search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஞாபக சக்தியை அதிகரிக்கும் சமான துடிப்பு முத்திரை
    X

    ஞாபக சக்தியை அதிகரிக்கும் சமான துடிப்பு முத்திரை

    இந்த முத்திரையை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் சிந்தனை தெளிவு அடையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். இன்று முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    முதல் நிலை செய்முறை:

    ஆள்காட்டி விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பிறகு நடுவிரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.

    பின் மோதிர விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். கடைசியாக சுண்டு விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.

    இரண்டாம் நிலைசெய்முறை :

    ஆள்காட்டி விரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பிறகு நடுவிரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.

    பின் மோதிர விரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். கடைசியாக சுண்டு விரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.

    மூன்றாம் நிலைசெய்முறை :

    ஐந்து விரல்களின் நுனிகளும் ஒன்றாக சேர்ந்திருக்குமாறு வைக்கவும்.மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.

    தினமும் காலை, மாலை மூன்று நிலைகளையும் 3 - 5 நிமிடம் செய்யவும்.

    பலன்கள்: சிந்தனை தெளிவு அடையும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
    Next Story
    ×