search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோபத்தை கட்டுப்படுத்தும் முஷ்டி முத்திரை
    X

    கோபத்தை கட்டுப்படுத்தும் முஷ்டி முத்திரை

    கோபம் அதிகம் வருபவர்கள் முஷ்டி முத்திரையை 48 நாட்கள் வரை செய்து வர கோப குணம் மாறுவதோடு, படபடப்பு நீங்கும். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    செய்முறை : ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிவிரல், சுண்டுவிரல் ஆகியவற்றை மடக்கி, உள்ளங்கைப் பகுதியில் வைத்து, கட்டைவிரலை நடுவிரலின் மேல் வைத்து மிதமாக அழுத்த வேண்டும்.

    15-30 நிமிடங்கள் வரை வெறும் வயிற்றில் இந்த முத்திரையை செய்ய வேண்டும்.

    பலன்கள் : கல்லீரலின் இயக்கம், சீராக மனச்சோர்வு, களைப்பு, கோபம், டென்ஷன், கவரை, மனஉளைச்சல், பயத்தை போக்கும், பித்தப்பபை, கணையம், குடல், செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்ய இந்த முத்திரையை செய்யலாம்.

    அஜீரணம் சரியாகி பசி எடுக்கும், கோபம் அதிகம் வருபவர்கள் முஷ்டி முத்திரையை 48 நாட்கள் வரை செய்து வர கோப குணம் மாறுவதோடு, படபடப்பு நீங்கும். இதய கோளாறு கட்டுப்படும்.
    Next Story
    ×