என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சுகப்பிரசவத்திற்கு அபான முத்திரை
Byமாலை மலர்23 July 2018 3:24 AM GMT (Updated: 23 July 2018 3:24 AM GMT)
கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பமாகி 8-ம் மாதம் முழுமை அடைந்த பிறகு தொடர்ந்து பேறுகாலம் வரை இந்த முத்திரையை பயிற்சி செய்து வந்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.
பெயர் விளக்கம்: மனித உடலின் அடிவயிற்று பகுதியில் செயல்படும் அபான வாயுவை இந்த முத்திரை நன்கு இயங்க செய்வதால் அபான முத்திரை என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை: தரை விரிப்பின் மேல் கால்களை மடக்கி வைத்து உட்காரவும். முடிந்தால் அர்த பத்மாசனத்தில் வலது கால் மேல் வரும்படி வைத்து உட்காரவும். முதுகு, கழுத்து, தலை ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும். இண்டு கைகளையும் நேராக நீட்டி முழங்கால்களின் மேல் உள்ளங்கைகளை வைக்கவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். அடுத்து இரண்டு உள்ளங்கைகளையும் திருப்பி மேல் நோக்கியபடி வைக்கவும்.
பிறகு கண்களை மெதுவாக திறந்து இரண்டு கைகளின் நடுவிரல் மற்றும் மோதிரவிரலை மடக்கி இவ்விரு விரல்களின் நுனிப் பகுதியோடு அந்தந்தக் கையின் கட்டை விரலின் நுனிப்பகுதியை தொடும்படி வைக்கவும். இரண்டு கைகளிலும் உள்ள மற்ற விரல்களான ஆள்காட்டி விரலையும் சிறுவிரலையும் நீட்டி வைக்கவும். கண்களை மூடவும் இந்த முத்திரையை ஒரு வேளைக்கு 15 நிமிடம் என காலை, மாலை பயிற்சி செய்யலாம்.
கவனம் செலுத்த வேண்டிய இடம்: அடிவயிற்றுப் பகுதியின் மீதும் மணி பூர சக்ரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக் குறிப்பு: தரை விரிப்பின் மேல் அமர்ந்து அபான முத்திரையை பயிற்சி செய்ய இயலாத கர்ப்பிணிப் பெண்கள் ஒரு மர நாற்காலியின் மேல் அமர்ந்து அபான முத்திரையை பயிற்சி செய்யலாம்.
தடைக்குறிப்பு: கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பமான முதல் மாதத்திலிருந்து எட்டாம் மாதம் முடியும் வரை இந்த முத்திரையை பயிற்சி செய்யக் கூடாது
பயன்கள்: உடல் பலம் பெறும். இருதயம் வலுப்பெறும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். படபடப்பு, பயம் நீங்கி மனம் வலிமை பெறும். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பமாகி 8ம் மாதம் முழுமை அடைந்த பிறகு தொடர்ந்து பேறுகாலம் வரை இந்த முத்திரையை பயிற்சி செய்து வந்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.
செய்முறை: தரை விரிப்பின் மேல் கால்களை மடக்கி வைத்து உட்காரவும். முடிந்தால் அர்த பத்மாசனத்தில் வலது கால் மேல் வரும்படி வைத்து உட்காரவும். முதுகு, கழுத்து, தலை ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும். இண்டு கைகளையும் நேராக நீட்டி முழங்கால்களின் மேல் உள்ளங்கைகளை வைக்கவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். அடுத்து இரண்டு உள்ளங்கைகளையும் திருப்பி மேல் நோக்கியபடி வைக்கவும்.
பிறகு கண்களை மெதுவாக திறந்து இரண்டு கைகளின் நடுவிரல் மற்றும் மோதிரவிரலை மடக்கி இவ்விரு விரல்களின் நுனிப் பகுதியோடு அந்தந்தக் கையின் கட்டை விரலின் நுனிப்பகுதியை தொடும்படி வைக்கவும். இரண்டு கைகளிலும் உள்ள மற்ற விரல்களான ஆள்காட்டி விரலையும் சிறுவிரலையும் நீட்டி வைக்கவும். கண்களை மூடவும் இந்த முத்திரையை ஒரு வேளைக்கு 15 நிமிடம் என காலை, மாலை பயிற்சி செய்யலாம்.
கவனம் செலுத்த வேண்டிய இடம்: அடிவயிற்றுப் பகுதியின் மீதும் மணி பூர சக்ரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக் குறிப்பு: தரை விரிப்பின் மேல் அமர்ந்து அபான முத்திரையை பயிற்சி செய்ய இயலாத கர்ப்பிணிப் பெண்கள் ஒரு மர நாற்காலியின் மேல் அமர்ந்து அபான முத்திரையை பயிற்சி செய்யலாம்.
தடைக்குறிப்பு: கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பமான முதல் மாதத்திலிருந்து எட்டாம் மாதம் முடியும் வரை இந்த முத்திரையை பயிற்சி செய்யக் கூடாது
பயன்கள்: உடல் பலம் பெறும். இருதயம் வலுப்பெறும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். படபடப்பு, பயம் நீங்கி மனம் வலிமை பெறும். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பமாகி 8ம் மாதம் முழுமை அடைந்த பிறகு தொடர்ந்து பேறுகாலம் வரை இந்த முத்திரையை பயிற்சி செய்து வந்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X