search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவாசத்தையும் மனதையும் ஆரோக்கியத்துடன் வைக்கும் யோகா
    X

    சுவாசத்தையும் மனதையும் ஆரோக்கியத்துடன் வைக்கும் யோகா

    யோகத்திலும் கூட பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் ஸ்தூல உடலையும், சுவாசத்தையும் மனதையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள ஹடயோக பயிற்சிகள் உதவுகின்றன.
    நல்ல உடல் ஆரோக்கியத்தை விரும்பாதவர்கள் உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். ஆரோக்கியத்தை காப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் யோகம். யோகத்திலும் கூட பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் ஸ்தூல உடலையும், சுவாசத்தையும் மனதையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள ஹடயோக பயிற்சிகள் உதவுகின்றன.

    ஹடயோகம், ஆசனம், பிராணாயாமம், பந்தங்கள், முத்திரைகள், ‘ட்கர்மா, தியானம் (அனுசந்தானம்) என 6 அங்கங்களை கொண்டுள்ளது.

    ஆசனம்:

    அர்த்த மத்ஸ்யேந்திராசனம்


    எலும்பு மண்டலம், தசை மண்டலம், மூளை மற்றும் நரம்பு மண்டலம், இருதயம் மற்றும் ரத்த ஓட்ட மண்டலம், நாளமில்லா சுரப்பி மண்டலம், நிணநீர் சுரப்பி மண்டலம் என உடலில் உள்ள அனைத்து மண்டலங் களும் ஆரோக்கியத் துடன் இருக்க ஆசனப் பயிற்சிகள் உதவுகின்றன.

    பிராணாயாமம்:-

    நாடி சோதனா பிராணாயாமம்


    சுவாச இயக்கத்தை சீர்படுத்தி உடலில் உள்ள கழிவுகளையும், நச்சுப் பொருட்களையும் வெளியேற்றி ரத்தத்தை தூய்மைப்படுத்தி உடலில் பிராண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மனதை அமைதிப்படுத்துகிறது.

    பந்தங்கள்:-

    உட்டியாண பந்தம்


    ஜாலந்தர பந்தம், உட்டியாண பந்தம், மூல பந்தம் என பந்தங்கள் மூன்று வகைப்படும். பந்தங்கள் உடலில் சூட்சும சக்கரங்களில் பிராண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. குண்டலினி சக்தியை விழிப்படைய செய்கிறது. இளமைத் தன்மையை நீட்டிக்கச் செய்கிறது.



    முத்திரைகள்:-

    சாம்பவி முத்திரை


    உடலில் குறிப்பிட்ட பகுதியில் பிராண சக்தியை நிறுத்தவும், குறிப்பிட்ட நரம்புகளில் பிராண ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் குண்டலினி சக்தியை விழிப் படையச் செய்கிறது. இளமை, சுறுசுறுப்பை நீடிக்க செய்கிறது.

    ஷட்கர்மா:-

    சூத்ரநேதி


    உடலின் உள்உறுப்புகளில் இருக்கும் கழிவுகளையும், நச்சுப்பொருட்களையும் வெளியேற்றி உடலை முழுமையாக தூய்மைப் படுத்துகிறது.
    தியானம்:- (நாத அனுசந்தானம்)

    நாத தியானம்

    மனதை அமைதிப் படுத்தவும், மனதை ஒருமுகப் படுத்தவும், மனமற்ற நிலையை தியானத் தில் அடை வதற்கும் இறைத் தன்மையை அறிவதற்கும் உதவுகிறது. மாசு கலந்த காற்றை சுவாசிப்பதாலும், மாசு கலந்த நீரை பருகுவதாலும், ரசாயன மருந்து கலந்த உணவை சாப்பிடுவதாலும் தற்கால வாழ்க்கை முறையில் மனிதன் மிகச்சிறிய வயதிலேயே பல நோய்களுக்கு உட்படுவதை காணமுடிகிறது.

    சமீப காலமாக பல புதுப்புது நோய்கள் உருவாகிக் கொண்டிருந்தாலும் மனிதன் அத்தகைய நோய்களுக்கு உட்படாமல் நீண்ட ஆயுளுடனும், முழு ஆரோக்கியத்துடனும் வாழ ஹடயோகப் பயிற்சிகள் உதவுகின்றன.

    - ஸ்ரீ ஸ்ரீ யோகி சிவானந்த பரமஹம்சா

    9442719144
    Next Story
    ×