search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தந்தை மகனுக்கு கற்றுத்தர வேண்டியவை
    X

    தந்தை மகனுக்கு கற்றுத்தர வேண்டியவை

    தந்தை- மகன் உறவு என்பது எப்பொழுதுமே இன்பம் நிறைந்த ஒன்றாகும். மகனுக்கு அப்பா மட்டுமே சொல்லித்தரகூடிய சில பாடங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
    தந்தை- மகன் உறவு என்பது எப்பொழுதுமே இன்பம் நிறைந்த ஒன்றாகும். மகன்கள் பெரியவர்களாகும் போது தந்தை சிறிது இடைவெளியை கடைபிடிப்பார். ஆனால், அப்பா மட்டுமே சொல்லித்தரகூடிய சில பாடங்கள் உள்ளன. அவை முக்கியமான வாழ்க்கை பாடங்களாகும். சில நேரம் அப்பாக்களுக்கே பிள்ளைகளுக்கு என்ன சொல்லித்தர வேண்டுமென்று தெரிவதில்லை. சொல்லித்தர வேண்டிய முக்கிய வாழ்க்கை பாடங்களை பட்டியலிட்டுள்ளோம்.

    1 பெண்களை மதித்தல்:

    மகனுக்கு சொல்லித்தர வேண்டிய மிக முக்கியமான பாடம் எந்த சூழ்நிலையிலும் பெண்களை மதிக்க வேண்டும் என்பதாகும். பிள்ளைகள் பெற்றோரின் செயல்களில் இருந்தே கற்றுக்கொள்வார்கள். எனவே, தந்தை எப்போதும் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டும்.

    2 பொறுப்பு:

    நாம் பிறந்த நாளில் இருந்து ஒரு நிகழ்வுக்கோ அல்லது பிற செயல்களுக்கோ பொறுப்பை எடுக்க வேண்டும். எனவே, பொறுப்பை ஏற்றுக்கொள்ள குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது ஒவ்வொரு அப்பாவின் கடமையாகும். தாய்மார்கள் பெரும்பாலும் அதிக உணர்ச்சிமிக்கவர்களாக இருப்பதால், தந்தைதான் இவற்றை கற்றுத்தர வேண்டும். எடுத்துக்காட்டு, பொதுச் செயல் செய்ய மற்றவர்கள் தயங்குவார்கள். எந்தத் தயக்கம் காட்டாமல் உடனே பொறுப்பை ஏற்று செய்யவேண்டும்

    3 உழைப்பு:

    இது அம்மா மற்றும் அப்பா இருவரும் கற்றுத்தர வேண்டிய பண்பாகும். அப்பா கடுமையான பக்கத்தையும். கடின உழைப்பையும் பற்றி கற்றுக்கொடுக்கும்போது, அம்மா கடினமான வேலையின் மென்மையான பக்கத்தையும், அதை எப்படி புத்திசாலித்தனமாக முடிக்க வேண்டுமெனவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

    4 விடாமுயற்சி வெற்றி தரும்:

    தோல்வி பயத்தில் குழந்தைகள் பெரும்பாலும் போட்டிகளில் பங்கேற்பதை தவிர்ப்பார்கள். சில நேரம் ஏமாற்ற கூட முயற்சிப்பார்கள். ஆனால், வெற்றியோ தோல்வியோ போட்டியில் பங்கேற்று சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கற்றுக்கொடுக்கவேண்டியது அப்பாவின் கடமையாகும். அதை தொடர்ந்து தான் குழந்தைகள் புதிய சிந்தனைகளை கற்றுக்கொள்ள முயற்சிப்பார்கள்.

    5 மகிழ்ச்சியாக வாழ்தல்:

    பெரும்பாலும் நம்மை சுற்றியுள்ள கவலைகள் நம்முடைய மகிழ்ச்சியை சிதைப்பதோடு நாம் கொண்டுள்ள வாழ்க்கையையும் மறக்க செய்யும். எனவே அப்பா கற்றுத்தருவதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்தும் காட்டவேண்டும். அப்பாக்கள் என்பவர்கள் உலகிலுள்ளவர்களின் மிக சிறந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் குழந்தையின் நலன் மற்றும் வளர்ச்சியைப் பற்றி கவலைப்படுவது மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைக்கு மிகச் சிறந்ததை வழங்கவும், சிறந்ததைச் செய்யவும் அவர்கள் அனைத்தையும் செய்கிறார்கள். செய்ய வேண்டும். 
    Next Story
    ×