search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைக்கு டயாபர் தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டியவை
    X

    குழந்தைக்கு டயாபர் தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டியவை

    டயாபர் தேர்வு என்பது சின்ன விஷயமாக தோன்றினாலும், உங்கள் குழந்தையை மிக வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் டயாபரையே சார்ந்திருக்கிறது.














    குழந்தை பிறந்தது முதல் மழலையர் பள்ளி முடித்து, அதன்பின் ஒரு 6 வயது வளரும் வரையிலும் கூட சிறுநீர், மலம் கழிக்க பழக்கப்படுத்துவது பெற்றோரைப் பொறுத்தவரை சற்று சவாலான விஷயம். அதிலும், அடுத்து வர இருக்கும் மழை மற்றும் குளிர்காலங்களில் புதிதாய் குழந்தை பிறந்திருக்கும் தாய்மார்களுக்கோ சற்று கூடுதல் டென்ஷன்.

    தங்கள் வேலையும், தூக்கமும் கெடாமல் இருப்பதற்காகவே பல மணி நேரம் தாங்கும் டிஸ்போசபிள் டயாபரை அம்மாக்கள் உபயோகிக்கத் தொடங்கிவிட்டார்கள். குழந்தை ஈரத்திலேயே ஊறி அலர ஆரம்பித்த பிறகுதான் அதை மாற்றுகிறார்கள். இதனால், எப்போதும் குழந்தை ஈரப்பதத்தோடு இருப்பதால் டயாபரில் கலந்துள்ள ரசாயனம் குழந்தையின் தோலில் பட்டு, புண்களை ஏற்படுத்திவிடுகிறது.

    அம்மாவிற்கு சௌகரியம்தான் இருந்தாலும், குழந்தையின் ஆரோக்கியம் முக்கிமாயிற்றே. தனித்துவமான உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ள உங்களுக்காக டயாபர் தேர்வு செய்வதில் சில டிப்ஸ்கள் இதோ...

    உங்கள் குழந்தையின் வயது மற்றும் எடைக்கேற்ற டயாபரை தேர்ந்தெடுக்கும்போது, அது சரியாகப் பொருந்துவதால் சிறுநீர் கசிவை ஏற்படுத்தாது. இதனால் உங்கள் குழந்தை சௌகரியமாக உணரும்.

    அடிக்கடி சிறுநீர், மலம் கழிக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கான டயாபரை தேர்ந்தெடுக்கும்போது நனையாமல் இருப்பதும், ஈரப்பதமில்லாததாகவும் இருப்பது முக்கியம்.

    குழந்தை கால்களை அசைக்கும்போது இடுப்பு மற்றும் தொடை இடுக்குப் பகுதிகளில் உராய்வு ஏற்படும். குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது என்பதால், சொரசொரப்பான டயாபர்கள் உரசி, அந்த இடங்களில் சிவந்து, தடித்துக் கொண்டு, சிலநேரங்களில் தோலே உரிந்தும் போய்விடும்.

    இதனால் எரிச்சல், வலி உண்டாகும். அதிலும் உங்கள் குழந்தையின் தோல் மிகவும் சென்சிடிவானது என்றால் நிலைமை மேலும் மோசமாகும். இதற்கு உடலோடு பொருந்தக்கூடிய, மெல்லிய பருத்தித் துணியினாலான டயாபர்கள்தான் சிறந்தவை. அவை உராய்வை ஏற்படுத்தாது.

    அதிலும், வெயில் காலங்களில் குழந்தையின் தொடை இடுக்குகளில் வியர்வை அதிகம் சுரந்து உராய்வின் போது கிருமித்தொற்றை ஏற்படுத்தக்கூடும். எந்த பருவத்திற்குமே உராய்வை ஏற்படுத்தாத மென்மையான பருத்தித் துணி சிறந்ததாக இருக்கும்.

    பயணங்களிலும், டே கேரில் விடும்போதும் டிஸ்போசபல் டயாபரை உபயோகிப்பது எளிதாக இருக்கும் என்பதால் அப்போது மட்டும் உபயோகிக்கலாம். இருந்தாலும் குழந்தையின் உடல்நலம் கருதி, பெற்றோர்கள் கூடியவரை காட்டன் துணியால் ஆன டயாபரையேஉபயோகிப்பது நல்லது.

    உங்கள் சௌகரியத்தை மட்டும் பார்க்காமல் உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சியையும், சுகத்தையும் தரக்கூடிய சுத்தமான, ஆரோக்கியமான டயாபர்களை தேர்ந்தெடுங்கள். ஏனென்றால் உங்கள் குழந்தைக்கு தரக்கூடிய அனைத்துமே மிகச்சரியானதாக இருக்க வேண்டும்.
    Next Story
    ×