search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாணவர்களின் கையில் வருங்கால இந்தியா
    X

    மாணவர்களின் கையில் வருங்கால இந்தியா

    மாணவர்களின் கைகளில்தான் வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது. மாணவர்களின் வளர்ச்சியில் தான் இந்தியாவின் வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது.
    இந்தியாவின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பது படிப்பறிவின்மை. நாம் பெற்ற செல்வம் குறையாத செல்வம் என்று சொன்னால் அது கல்வி ஒன்றாகத்தான் இருக்க முடியும். அறியாமையைப் போக்கவல்லது கல்வி ஒன்றுதான். அதனால் தான் பெருந்தலைவர் காமராஜர், சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைத் தகர்க்கக்கூடிய சக்தி கல்விக்கு மட்டும்தான் உண்டு என்ற அடிப்படையில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் கல்விக் கூடங்கள் தமிழகத்தில் வளர்ச்சியைடந்தன.

    இந்தியாவின் வளர்ச்சியே மாணவர்களின் கையில்தான். மாணவன் என்றால் மாண்+அவன் என்று பிரிக்கலாம். மாண் என்றால் பெருமை. மாணவன் என்றால் பெருமைக்குரியவன், மாண்புடையவன் என்று பொருள். அதனால்தான் மாணவர்கள் என்று இந்தப் பருவத்தினரை ஊக்கப்படுத்தி வருகின்றார்கள். பெருமைமிக்க திறமைகள் இப்பருவத்தில்தான் கிடைக்கும்.

    மாணவர்களின் கைகளில்தான் வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது. மாணவர்களின் வளர்ச்சியில் தான் இந்தியாவின் வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது. மாணவர்களின் சுயதிறன் திண்மை பெற வேண்டும் என்றால், கல்வியின் தரம் உயர வேண்டும். முக்கியமாக விஞ்ஞானம், கணிதம், கணினிப் பயிற்சி கற்பிக்கப்பட வேண்டும். கல்விப் புரட்சி ஒன்றுதான் மாணவர்களின் சிந்திக்கும் சக்தியை வளர்க்கச் செய்யும்.

    தொட்டனைத்தூறும் மணற்கேணி போல் தோண்டத் தோண்டப் பெருக்கெடுக்கும் வல்லமை படைத்தது படிப்பறிவு ஒன்றுதான். படிக்கும் போதே ஒரு லட்சியத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். லட்சியப் பாதையில் எத்தனையோ சறுக்கல்களும், தோல்விகளும் நம் பயணத்தை தடை செய்யக்கூடும். ஆனால், தோல்வி நமது வாழ்க்கைக்கு வேண்டுமானால் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் தோல்வி என்பது நம் தன்னம்பிக்கையை எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது.

    மாவீரன் அலெக்சாண்டரின் ஆசிரியர் அரிஸ்டாடில், எந்த ஒரு பிரச்சினை என்றாலும், அதை ஆராயும் முறையையும், கேள்வி கேட்கும் நேர்த்தியையும் புகட்டினார். ஒரு மாவீரன் உருவானான். மாணவர்-ஆசிரியர் இடையே அத்தகைய அறிவுப் பரிமாற்றம் ஏற்பட வேண்டும். அதனால்தான் பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகள் தான் ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது என்று கூறப்படுகிறது. பாரதியின் ஆத்திச்சூடி போல் புதிய கல்வித்திட்டம் அறிவொளிமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கட்டும்.

    இன்றைய மாணவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். ஏனெனில், மாணவர்கள் எவ்வாறு அமைகிறார்களோ அந்த வகையில்தான் இந்தியா செல்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இந்தியாவின் நலனில் அக்கறை உள்ளது. சுதந்திர இந்தியாவின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாப்போம், நாட்டை வல்லரசாக உயர்த்துவோம் என்று உறுதிகொள்ளுங்கள். 
    Next Story
    ×