search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இந்த நொறுக்குத்தீனிகள் குழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும்
    X

    இந்த நொறுக்குத்தீனிகள் குழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும்

    பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் வாங்கிக் கொடுக்கும் நொறுக்குத்தீனிகளால் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமலேயே வாங்கிக்கொடுக்கின்றனர்.
    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு உணவு உண்ணும் ஆர்வம் குறைந்து, நொறுக்குத்தீனிகளை எந்நேரம் பார்த்தாலும் அரைத்துக் கொண்டே இருக்கும் பழக்கம் வந்துவிட்டது; பெற்றோர்களும் குழந்தை உணவை தான் சாப்பிடுவதில்லை இதையாவது சாப்பிடட்டும் என்று குழந்தையின் தேவைக்கு அதிகமாக நொறுக்குத்தீனிகளை வாங்கி குவித்து விடுகின்றனர்..! பெற்றோர் செயலில் மனம் மகிழ்ந்த குழந்தைகளும், அவற்றை தின்று வயிற்றை நிரப்பிக்கொண்டே, கூடவே உடல் எடையையும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றனர்.

    ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் வாங்கிக் கொடுக்கும் நொறுக்குத்தீனிகளால் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமலேயே வாங்கிக்கொடுக்கின்றனர்.! அப்படி குழந்தைகளுக்கு புற்றுநோய் அளிக்கும் நொறுக்குத்தீனிகள் எவை என்று பார்க்கலாம்..!

    * PFOA (perfluorooctanoic acid), diacetyl and propyl gallate போன்ற வேதிப்பொருட்கள் இன்றைய எண்ணெயில்லாத பாப்கார்னை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. இதில் PFOA எனும் அமிலம் நச்சுத்தன்மை வாய்ந்தது; ஆனால் இதையெல்லாம் அறியாமல் பாப்கார்ன் குழந்தைகளின் உடலுக்கு நல்லது என்று பெற்றோர் வாங்கிக் கொடுக்கின்றனர்.



    * உருளைக்கிழங்கு சிப்ஸ்களை அதிக வெப்பநிலையில் பொரித்து எடுப்பதால், அவற்றில் காரசினோஜெனிக் எனும் புற்றுநோய் உருவாக்கும் காரணி தோன்றிவிடுகிறது; இதை அக்ரிலாமைட் என்றும் அழைப்பர். மேலும் இதில் அதிக உப்பு சேர்ப்பதும் குழந்தைகளின் உடல் நலத்தை மிகவும் பாதிக்கும்..!

    * தற்போதுள்ள வெளிநாட்டு குளிர்பானங்கள் குழந்தைகளின் உடல் நலத்தைக் குதறும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டவையே! இவற்றைப் பருகுவதால், குழந்தைகளுக்கு pancreatic, colon and rectal cancer போன்ற புரியாத பல நோய்களும், பற்சிதைவு, குண்டாதல், சர்க்கரை நோய் போன்றவையும் ஏற்படுகின்றன. இந்த மாதிரியான பானங்களில் அத்தனித்த சுவையை கொண்டு வருவதற்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், குழந்தைகளுக்கு இருதய நோய், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

    * பிரட்டுகளை தயாரிக்க சேர்க்கப்படும் வேதி ஈஸ்டுகள், செயற்கை சர்க்கரை போன்றவை குழந்தைகளில் புற்றுநோய் மற்றும் அவர்களின் உடற்செயலிய மாற்றத்தைக் ஏற்படுத்தி, அவர்களை குண்டாக்கி குழந்தைகளின் உடலை நிலைகுலைய செய்கின்றன..

    * குழந்தைகளுக்கு நலம் பயக்கும் என பெற்றோர்கள் அளிக்கும் செயற்கை தானிய உணவுகள், குழந்தைகளின் உடல் நலத்தை முற்றிலுமாக கெடுத்துவிடுகின்றன. இந்த தானிய உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரை, நிறங்கள் மேலும் பல வேதிப்பொருட்கள் போன்றவை குழந்தைகளுக்கு அதிக தீங்கினை விளைவிக்கின்றன.
    Next Story
    ×