search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சரும நோய்கள்
    X

    குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சரும நோய்கள்

    குழந்தை தோலின் இந்த பலவீனமான தன்மை காரணமாக, பல்வேறு வகையான தோல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய 7 சரும பிரச்சனைகளை பார்க்கலாம்.
    குழந்தை தோலின் இந்த பலவீனமான தன்மை காரணமாக, பல்வேறு வகையான தோல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு பதிலாக அந்த நோய்களை பற்றி தெரிந்துகொள்வது சிறந்தது. எனவே அந்த நோய்களை பற்றியும் குழந்தைக்கு அவை வந்தால் செய்ய வேண்டிய சிகிச்சைகள் பற்றியும் நீங்கள் நன்கு அறிவீர்கள். மேலும் நோயின் தீவிரத்தையும், அதை சமாளிக்க என்ன செய்ய வேண்டுமெனவும் அறிவீர்கள். பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய 7 சரும பிரச்சனைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    வேர்க்குரு:

    இது முகம், கழுத்து, பின்புறம், அல்லது அடிவயிற்றில் அதிகமாக காணப்படும். இது மில்லியாரியா என்றும் அழைக்கப்படுகிறது, சிறிய சிவப்பு புடைப்புகள் வடிவத்தில் இது காட்சியளிக்கும். சூடான வானிலை அல்லது சூடான ஆடைகள் போன்ற பல்வேறு காரணங்களாலும் உங்கள் குழந்தையின் உடல் சூடு காரணமாகவும் இது ஏற்படுகிறது. நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது உங்கள் குழந்தையை வெப்பத்திலிருந்து வெளியேற்றுவது அல்லது உங்கள் குழந்தையின் உடலுக்கு ஒட்டாத சில தளர்வான ஆடைகளை அணிவிக்க வேண்டும். இது வெடிப்புகளை குறைக்க உதவுகிறது.

    குழந்தை முகப்பரு:

    இந்த சிறிய முகப்பருக்கள் அதிகளவு எரிச்சலூட்டும் என்று யார் அறிவார்கள்? இது நீங்கள் நினைப்பதை விட சாதாரணமானது. இது பொதுவாக சிறிய பருக்கள் அல்லது வெள்ளை நிறத்தில், உங்கள் குழந்தையின் முகம், கழுத்து மற்றும் கன்னத்தில் ஏற்படும். இவற்றை அவற்றின் ஆரம்ப காலத்திலேயே குணப்படுத்தப்பட வேண்டும், முடிந்தளவு இரசாயனம் கலக்காத குணப்படுத்த கூடிய எதிர்ப்பு பொருட்களை பயன்படுத்துங்கள்.

    அம்மை:

    தடுப்பூசி போட்டாலும் உங்கள் குழந்தைக்கு அம்மைநோய் வர வாய்ப்புகள் உள்ளது. குழந்தை பருவத்தில் இது வருவது சாதாரணம் தான். அதுமட்டுமல்லாமல் இதனை மருத்துவரீதியாக எளிதில் குணப்படுத்தலாம். அம்மை நோய் பொதுவாக சிவப்பு கொப்புளங்கள் அல்லது தடிப்புகள் வடிவில் வெளிப்படுகிறது. இது காய்ச்சல், பசியின்மை, குமட்டல், மற்றும் தசை வலிகள் ஆகியவற்றால் கூட ஏற்படலாம். இது ஒரு தொற்றுநோயாகும். ஒருவருக்கு ஏற்கனவே அம்மை வந்து குணமாகி இருந்தால் மீண்டும் அம்மை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.



    எக்ஸிமா:

    எக்ஸிமா என்பது தோலின் சில பகுதிகளில் மட்டும் அரிப்பு, கொப்புளங்கள், இரத்த கசிவு போன்றவை ஏற்படும் நிலையாகும். இது கைகள், முகம், கழுத்து, முழங்கைகள் மற்றும் முழங்கால்களில் ஏற்படலாம். இது 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்பே ஏற்படலாம் மற்றும் சூடான வானிலை, குளிர் காலநிலை, சில சோப்புகள், சில துணிகள், போன்ற பல காரணிகள் இது ஏற்பட காரணமாகின்றன. இதை குணப்படுத்துவதற்கு ஈரத்துணியை வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் மென்மையாக தேய்த்து நன்கு சுத்தம் செய்ய வேண்டும், பின் தோல் மருத்துவரிடம் ஆலோசனை செய்து பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகளை பயன்படுத்தலாம்.

    குளிர் புண்கள்:

    குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு குளிர் புண்கள் மிகவும் பொதுவானவை. இவை வாய்வழி பகுதியில் கொப்புளங்கள் வடிவில் உருவாகின்றன, அவை பின்னர் வலுவான புண்களாக மாறும். இது வீங்கிய ஈறுகளில் தொடங்கி வாயின் அனைத்து பகுதிகளையும் தாக்கும். இதனால் வீக்கம் ஏற்படுவதுடன் காய்ச்சலையும் ஏற்படுத்தலாம். இந்த புண்கள் 5-10 நாட்கள் வரை நீடிக்கும். பின்னர் அவை மறைய தொடங்கும். இதனால் பசியின்மை, தாகமின்மை ஏற்படலாம், ஆனால் உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    கை, கால் மற்றும் வாய் நோய்

    இந்த நோய் கொப்புளங்கள், தொண்டை புண், மற்றும் லேசான காய்ச்சல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. பெயரில் குறிப்பிடுவதுபோல், கொப்புளங்கள் உடலின் கை, கால் மற்றும் வாய்க்குரிய பகுதிகளில் உடைந்து போகின்றன. மேலும் இவை குழந்தைகளின் கீழ்புறத்தை நோக்கி பரவுகின்றன. இந்த புண் வந்தால் சாப்பிடுவதும், குடிப்பதும் மிகவும் சிரமமாகிவிடும். குழந்தைகள் மருத்துவரை விரைவில் அணுகி சரியான மருந்துகளை உபயோகியுங்கள், குழந்தையின் உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    விழி வெண்படல அழற்சி:


    குழந்தைகளுக்கு பெருமளவில் ஏற்படும் நோய் இதுவாகும். இது பாக்டீரியா, ஒவ்வாமை, அல்லது வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும்  நோய்த்தொற்று ஆகும். இதனால் கண்ணீரில் இளஞ்சிவப்பு நிற ஒட்டும் தன்மை கொண்ட நீர் வெளியேறும். இதனால் கண்கள் சிவப்பாகவும் விழித்திரை மஞ்சள் நிறத்திலும் மாறும். இந்த தொற்றுநோயிலிருந்து குழந்தையை பாதுகாக்க விரைவில் குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும்.
    Next Story
    ×