என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளுக்கு ஏற்படும் மன வளர்ச்சி பிரச்சினைகள்
Byமாலை மலர்30 March 2018 5:12 AM GMT (Updated: 30 March 2018 5:12 AM GMT)
பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரைக்கும் குழந்தைகள் மன வளர்ச்சி பிரச்சனை குறித்த விழிப்புணர்வு போதிய அளவு இல்லை.
ஆட்டிசம், கவனக்குறைவு நோய், அஸ்பெர்கர் நோய், இன்னும் இன்னதென வரையறுக்க முடியாத நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உலகம் முழுக்க அதிகரித்துவருகிறது. 2014-ம் ஆண்டு கணக்குப்படி, உலக மக்கள்தொகையில் ஒரு சதவிகிதம் பேர் ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளானவர்கள்.
அமெரிக்காவில் 68 குழந்தைகளில் ஒன்று ஆட்டிசம் பாதிப்போடு பிறக்கிறது. இந்தியாவில், 2012-ம் ஆண்டு கணக்குப்படி, ஒரு கோடி பேருக்கு ஆட்டிசம் பாதிப்பு இருக்கிறது. பிறக்கும் 88 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் பிரச்னையோடு பிறக்கிறது. இந்தியாவில் இருபது லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரைக்கும் குழந்தைகள் மன வளர்ச்சி பிரச்சனை குறித்த விழிப்புணர்வு போதிய அளவு இல்லை. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது. இதுகுறித்து ஸ்ரீவர்மா ஆயுர்வேத மருத்துவமனை இயக்குனர் டாக்டர் கௌதமன் கூறுகையில்,
மன வளர்ச்சி பிரச்சனை என்பது வரையறுக்கப்பட முடியாதது. எனவே, எந்தக் கட்டத்திலும் இதற்கு மேல் நம் குழந்தைக்கு வளர்ச்சி இருக்காது என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். வாழ்நாளின் ஏதேனும் ஒரு கணத்தில் அக்குழந்தைகள் எதையேனும் சாதிக்க முடியும். எனவே, மனதைத் தளர விடாமல் தொடர்ந்து கற்க அவர்களை ஊக்குவியுங்கள். பல்வேறு வாய்ப்புகளை அவர்களுக்குத் தொடர்ந்து அளியுங்கள். இசை, நடனம், ஓவியம், புதிர்களை அடுக்குதல், ஸ்கேட்டிங் என எல்லா வகை வகுப்புகளையும் மெல்ல மெல்ல அறிமுகப்படுத்துங்கள். அக்குழந்தைக்குள் ஒளிந்திருக்கும் ஏதேனும் ஒரு திறனை நீங்கள் அறிய நேரிடலாம். அது குழந்தையின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தலாம்.
மன வளர்ச்சி பிரச்சைனைகள் குழந்தைகளுக்கு ஏற்படும்போது அதற்கான காரணத்தை கண்டு முறையான சிகிச்சை அளிப்பதுதான் ஆயுர்வேத சிகிச்சை முறை. அந்த வழியில் பார்க்கும்போது குழந்தைகளுக்கு ஏற்படும் மன அல்லது மூளை வளர்ச்சி பிரச்சனைகளுக்கு உடலில் உள்ள சில வேதியல் பொருட்களின் மிக அதிகமான அளவே காரணமாக இருக்கிறது.
ரத்தத்தில் உள்ள பாதரசம் துத்தநாகம் ஆர்சனிக் தாமிரம் அலுமினியம் மெக்னிசியம் மற்றும் வேறு ஏழு வகையான கனிமங்களின் அளவே எந்த பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது. உடலில் மிக அதிகமாக உள்ள இந்த கனிமங்களை சுத்தப்படுத்தி உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை சரி செய்யும் போது மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை பார்க்கலாம் ஆயுர்வேதத்தில் செய்யப்படும் பஞ்ச கர்மா சிகிச்சைகள் மற்றும் உணவு முறை மாற்றங்கள் உடல் மற்றும் மன பயிற்சிகள் எல்லாம் சேர்ந்த ஒரு சிகிச்சையாக ஒருங்கிணைத்த சிகிச்சையாக கொடுக்க படும் போது எந்த பிரச்சையின் தீவிரம் படிப்படியாக குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை பார்க்கலாம்.
ஆயுர்வேத சிகிச்சையுடன் சேர்ந்து பேச்சு மற்றும் நடத்தைக்கான பயிற்சியும் சேர்ந்து கொடுக்கப்படும் போது நல்ல முன்னேற்றம் ஏற்படுவதையும் குழந்தையின் ஆரோக்கியம் உடல் மற்றும் மன அளவில் படிப்படியாக மாறி குணம் அடைவதை பார்க்கலாம் என்று கூறினார்.
அமெரிக்காவில் 68 குழந்தைகளில் ஒன்று ஆட்டிசம் பாதிப்போடு பிறக்கிறது. இந்தியாவில், 2012-ம் ஆண்டு கணக்குப்படி, ஒரு கோடி பேருக்கு ஆட்டிசம் பாதிப்பு இருக்கிறது. பிறக்கும் 88 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் பிரச்னையோடு பிறக்கிறது. இந்தியாவில் இருபது லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரைக்கும் குழந்தைகள் மன வளர்ச்சி பிரச்சனை குறித்த விழிப்புணர்வு போதிய அளவு இல்லை. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது. இதுகுறித்து ஸ்ரீவர்மா ஆயுர்வேத மருத்துவமனை இயக்குனர் டாக்டர் கௌதமன் கூறுகையில்,
மன வளர்ச்சி பிரச்சனை என்பது வரையறுக்கப்பட முடியாதது. எனவே, எந்தக் கட்டத்திலும் இதற்கு மேல் நம் குழந்தைக்கு வளர்ச்சி இருக்காது என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். வாழ்நாளின் ஏதேனும் ஒரு கணத்தில் அக்குழந்தைகள் எதையேனும் சாதிக்க முடியும். எனவே, மனதைத் தளர விடாமல் தொடர்ந்து கற்க அவர்களை ஊக்குவியுங்கள். பல்வேறு வாய்ப்புகளை அவர்களுக்குத் தொடர்ந்து அளியுங்கள். இசை, நடனம், ஓவியம், புதிர்களை அடுக்குதல், ஸ்கேட்டிங் என எல்லா வகை வகுப்புகளையும் மெல்ல மெல்ல அறிமுகப்படுத்துங்கள். அக்குழந்தைக்குள் ஒளிந்திருக்கும் ஏதேனும் ஒரு திறனை நீங்கள் அறிய நேரிடலாம். அது குழந்தையின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தலாம்.
மன வளர்ச்சி பிரச்சைனைகள் குழந்தைகளுக்கு ஏற்படும்போது அதற்கான காரணத்தை கண்டு முறையான சிகிச்சை அளிப்பதுதான் ஆயுர்வேத சிகிச்சை முறை. அந்த வழியில் பார்க்கும்போது குழந்தைகளுக்கு ஏற்படும் மன அல்லது மூளை வளர்ச்சி பிரச்சனைகளுக்கு உடலில் உள்ள சில வேதியல் பொருட்களின் மிக அதிகமான அளவே காரணமாக இருக்கிறது.
ரத்தத்தில் உள்ள பாதரசம் துத்தநாகம் ஆர்சனிக் தாமிரம் அலுமினியம் மெக்னிசியம் மற்றும் வேறு ஏழு வகையான கனிமங்களின் அளவே எந்த பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது. உடலில் மிக அதிகமாக உள்ள இந்த கனிமங்களை சுத்தப்படுத்தி உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை சரி செய்யும் போது மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை பார்க்கலாம் ஆயுர்வேதத்தில் செய்யப்படும் பஞ்ச கர்மா சிகிச்சைகள் மற்றும் உணவு முறை மாற்றங்கள் உடல் மற்றும் மன பயிற்சிகள் எல்லாம் சேர்ந்த ஒரு சிகிச்சையாக ஒருங்கிணைத்த சிகிச்சையாக கொடுக்க படும் போது எந்த பிரச்சையின் தீவிரம் படிப்படியாக குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை பார்க்கலாம்.
ஆயுர்வேத சிகிச்சையுடன் சேர்ந்து பேச்சு மற்றும் நடத்தைக்கான பயிற்சியும் சேர்ந்து கொடுக்கப்படும் போது நல்ல முன்னேற்றம் ஏற்படுவதையும் குழந்தையின் ஆரோக்கியம் உடல் மற்றும் மன அளவில் படிப்படியாக மாறி குணம் அடைவதை பார்க்கலாம் என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X