என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மாணவர்கள் தேர்வு சமயத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது?
Byமாலை மலர்5 March 2018 3:10 AM GMT (Updated: 5 March 2018 3:10 AM GMT)
தேர்வு சமயத்தில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் சில உண்டு. தேர்வு நேரத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி பார்ப்போம்...
பிளஸ்-2 மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. 10-ம் வகுப்பு மாணவர்கள் பரபரப்பாக பொதுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பீர்கள். இந்த சமயத்தில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் சில உண்டு. தேர்வு நேரத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி பார்ப்போம்...
* ‘தேர்வு’ என்கிற அச்சமின்றி நிதானமாக, தன்னம்பிக்கையுடன் தயாராகுங்கள். நீங்கள் ஆண்டு முழுவதும் படித்த பாடத்தில் இருந்துதான் கேள்விகள் வரப்போகின்றன என்பதால் பயம் தேவையில்லை.
* அடுத்த நாளுக்கான, அடுத்த தேர்வுக்கான பாடங்களை படிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
* இடைவேளை நாட்களை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்.
* படிக்கும் வேளையில் குழுவாக சேர்ந்து படித்தால் உற்சாகமாக இருக்கும். சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். குழுவாக படிக்க முடியாவிட்டால், தேர்வு முடியும் வரை பெற்றோரை உதவிக்கு அழைத்துக் கொள்ளலாம்.
* வழக்கமாக தூங்கச் செல்லும் நேரத்திற்கு ஓய்வெடுக்க கிளம்பிவிடுங்கள். இரவு 11 மணிக்குப் பிறகும் விழித்திருந்து படிப்பதால் உடம்புக்குத்தான் கேடு. அவை நினைவில் தங்குவதும் குறைவுதான். எனவே நேரத்திற்கு தூங்கச் சென்றுவிட்டு, அதிகாலையில் எழுந்து படிக்கலாம்.
* நாளைய தேர்வுக்கான உபகரணங்களை முந்தைய நாள் இரவிலேயே தயார்படுத்தி வையுங்கள். பென்சில், ஸ்கேல், ரப்பர், ஸ்கெட்ச், ஜியாமெட்ரிக் பாக்ஸ், பேனா, கூடுதல் பேனா அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அனைத்தும் தவறிவிடாமல் இருக்க கண்ணாடி ‘பவுச்’சில் மொத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
* அதுபோலவே பள்ளி அடையாள அட்டை, பஸ் பயண பாஸ், தேர்வு அடையாள அட்டை அனைத்தையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். வீட்டைவிட்டு கிளம்பும் முன் அனைத்தையும் ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
* எளிதில் ஜீரணம் ஆகும் காய்கறி உணவுகள், பழங்களை சாப்பிடுங்கள். சோம்பலாக இருந்தால் சூடான பானம் அல்லது குளிர்ச்சியான ஜூஸ் இவற்றைப் பருகி புத்துணர்ச்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது சுறுசுறுப்பாக படிக்க உதவியாக இருக்கும்.
செய்யக்கூடாதவை
* உடலை பாதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. கிரிக்கெட் ஆடுவது, பைக் சாகசங்களில் ஈடுபடுவது, கிணற்றில் குதித்து குளிப்பது, மரங்களில் ஏறி விளையாடுவது போன்ற காயம் ஏற்பட வாய்ப்புள்ள செயல்களில் ஈடுபடக்கூடாது. அவசியம் ஏற்பட்டால் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
* குறைந்த நேரமே படிப்பதற்கு இருப்பதாக எண்ணிக்கொண்டு இருக்கையைவிட்டு எழுந்திருக்காமல் படிக்கக்கூடாது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சுமார் 5 நிமிடங்களாவது உலாவ வேண்டும்.
* இரவு நீண்ட நேரம் கண்விழித்துப் படிக்கக்கூடாது. ‘தூங்காமல் படிக்கிறேன் பார்’ என்று கடும் சவாலுடன் முழித்திருந்து படித்துவிட்டு, தேர்வறையில் அசதியாக இருந்தால் பரீட்சையை திருப்தியாக எழுத முடியாது.
* படிக்காத பாடங்கள் நிறைய இருப்பதாக புலம்பிக் கொண்டிருக்கக்கூடாது. படித்த பாடங்களை திரும்ப நினைவுபடுத்தி, தெரிந்ததை தெளிவாக எழுதி தேர்ச்சி பெறுவதை லட்சியமாகக் கொள்ள வேண்டும்.
* அவசியமான காரியங்களுக்கு மட்டும் நேரம் செலவிட வேண்டும். செல்போனில் விளையாடுவது, நண்பருக்காக காத்திருத்தல், சின்ன வேலையாக வெளியே சென்றுவிட்டு வருவதாக எண்ணி, நீண்ட நேரமாக படிப்பிற்கு இடைவெளி விடுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
* தேர்வு எழுதி முடித்தபின், எழுதிய தேர்வு பற்றி நண்பர்களுடன் கலந்து ஆலோசிப்பது வேண்டாம். தேர்வை நன்றாக எழுதவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கவும் வேண்டாம். அடுத்த தேர்வை சிறப்பாக எழுதுவது பற்றி யோசியுங்கள், செயலில் இறங்குங்கள்.
* புதிய வகை உணவுகளை ருசிப்பதை தவிருங்கள். மசாலா- எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளை குறைத்துவிடுங்கள்.
* ‘தேர்வு’ என்கிற அச்சமின்றி நிதானமாக, தன்னம்பிக்கையுடன் தயாராகுங்கள். நீங்கள் ஆண்டு முழுவதும் படித்த பாடத்தில் இருந்துதான் கேள்விகள் வரப்போகின்றன என்பதால் பயம் தேவையில்லை.
* அடுத்த நாளுக்கான, அடுத்த தேர்வுக்கான பாடங்களை படிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
* இடைவேளை நாட்களை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்.
* படிக்கும் வேளையில் குழுவாக சேர்ந்து படித்தால் உற்சாகமாக இருக்கும். சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். குழுவாக படிக்க முடியாவிட்டால், தேர்வு முடியும் வரை பெற்றோரை உதவிக்கு அழைத்துக் கொள்ளலாம்.
* வழக்கமாக தூங்கச் செல்லும் நேரத்திற்கு ஓய்வெடுக்க கிளம்பிவிடுங்கள். இரவு 11 மணிக்குப் பிறகும் விழித்திருந்து படிப்பதால் உடம்புக்குத்தான் கேடு. அவை நினைவில் தங்குவதும் குறைவுதான். எனவே நேரத்திற்கு தூங்கச் சென்றுவிட்டு, அதிகாலையில் எழுந்து படிக்கலாம்.
* நாளைய தேர்வுக்கான உபகரணங்களை முந்தைய நாள் இரவிலேயே தயார்படுத்தி வையுங்கள். பென்சில், ஸ்கேல், ரப்பர், ஸ்கெட்ச், ஜியாமெட்ரிக் பாக்ஸ், பேனா, கூடுதல் பேனா அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அனைத்தும் தவறிவிடாமல் இருக்க கண்ணாடி ‘பவுச்’சில் மொத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
* அதுபோலவே பள்ளி அடையாள அட்டை, பஸ் பயண பாஸ், தேர்வு அடையாள அட்டை அனைத்தையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். வீட்டைவிட்டு கிளம்பும் முன் அனைத்தையும் ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
* எளிதில் ஜீரணம் ஆகும் காய்கறி உணவுகள், பழங்களை சாப்பிடுங்கள். சோம்பலாக இருந்தால் சூடான பானம் அல்லது குளிர்ச்சியான ஜூஸ் இவற்றைப் பருகி புத்துணர்ச்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது சுறுசுறுப்பாக படிக்க உதவியாக இருக்கும்.
செய்யக்கூடாதவை
* உடலை பாதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. கிரிக்கெட் ஆடுவது, பைக் சாகசங்களில் ஈடுபடுவது, கிணற்றில் குதித்து குளிப்பது, மரங்களில் ஏறி விளையாடுவது போன்ற காயம் ஏற்பட வாய்ப்புள்ள செயல்களில் ஈடுபடக்கூடாது. அவசியம் ஏற்பட்டால் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
* குறைந்த நேரமே படிப்பதற்கு இருப்பதாக எண்ணிக்கொண்டு இருக்கையைவிட்டு எழுந்திருக்காமல் படிக்கக்கூடாது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சுமார் 5 நிமிடங்களாவது உலாவ வேண்டும்.
* இரவு நீண்ட நேரம் கண்விழித்துப் படிக்கக்கூடாது. ‘தூங்காமல் படிக்கிறேன் பார்’ என்று கடும் சவாலுடன் முழித்திருந்து படித்துவிட்டு, தேர்வறையில் அசதியாக இருந்தால் பரீட்சையை திருப்தியாக எழுத முடியாது.
* படிக்காத பாடங்கள் நிறைய இருப்பதாக புலம்பிக் கொண்டிருக்கக்கூடாது. படித்த பாடங்களை திரும்ப நினைவுபடுத்தி, தெரிந்ததை தெளிவாக எழுதி தேர்ச்சி பெறுவதை லட்சியமாகக் கொள்ள வேண்டும்.
* அவசியமான காரியங்களுக்கு மட்டும் நேரம் செலவிட வேண்டும். செல்போனில் விளையாடுவது, நண்பருக்காக காத்திருத்தல், சின்ன வேலையாக வெளியே சென்றுவிட்டு வருவதாக எண்ணி, நீண்ட நேரமாக படிப்பிற்கு இடைவெளி விடுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
* தேர்வு எழுதி முடித்தபின், எழுதிய தேர்வு பற்றி நண்பர்களுடன் கலந்து ஆலோசிப்பது வேண்டாம். தேர்வை நன்றாக எழுதவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கவும் வேண்டாம். அடுத்த தேர்வை சிறப்பாக எழுதுவது பற்றி யோசியுங்கள், செயலில் இறங்குங்கள்.
* புதிய வகை உணவுகளை ருசிப்பதை தவிருங்கள். மசாலா- எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளை குறைத்துவிடுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X