search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளைத் தாக்கும் நோய்களை டி.என்.ஏ. சோதனையால் அறியலாம்
    X

    குழந்தைகளைத் தாக்கும் நோய்களை டி.என்.ஏ. சோதனையால் அறியலாம்

    குழந்தைகளைத் தாக்கும் வலிப்பு, முதுகுத் தண்டுவட பாதிப்பு, புற்றுநோய் உள்பட 193 நோய்களை டி.என்.ஏ. சோதனையால் கண்டுபிடிக்க முடியும்.
    மனிதர்களாகிய நம்மைத் தாக்கும் நோய்களைக் கண்டுபிடிக்க பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    தற்போது, டி.என்.ஏ. பரிசோதனை மூலம் நோய்கள் கண்டறியப்படும் நிலை உருவாகியிருக்கிறது.

    அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சமீபத்தில் டி.என்.ஏ. தொடர்பான ஆய்வை நடத்தியது. அதன் மூலம், குழந்தைகளைத் தாக்கும் வலிப்பு, முதுகுத் தண்டுவட பாதிப்பு, புற்றுநோய் உள்பட 193 நோய்களை டி.என்.ஏ. சோதனையால் கண்டுபிடிக்க முடியும் என அறிவித்துள்ளது.

    இந்தப் பரிசோதனைக்கு சீமா4 நடாலிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. குழந்தைகளிடம் எடுக்கப்படும் டி.என்.ஏ.வில் 5 தடவை பரிசோதனை நடத்துவதன் மூலம் நோய்கள் கண்டறியப்பட்டன.

    இந்தப் பரிசோதனைக்கு அமெரிக்க டாக்டர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் மூலம் குழந்தைகளைத் தாக்கும் நோய்களைத் தடுக்க சிகிச்சை மேற்கொள்ள முடியும், மேலும் எதிர்கால சந்ததியினருக்கு இத்தகைய நோய் வராமல் தடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
    Next Story
    ×