என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பெற்றோர் குழந்தைகளின் கவலையை புரிந்து கொள்வது எப்படி
Byமாலை மலர்20 Feb 2018 8:58 AM GMT (Updated: 20 Feb 2018 8:58 AM GMT)
குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து அவர்களின் மன வருத்தங்களை போக்குவது பெற்றோரின் கையில்தான் இருக்கிறது.
மன அழுத்தம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது. ஆனால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாவதை பெரும்பாலான பெற்றோர்கள் கவனத்தில் கொள்வதில்லை. ‘ஏதோ கோபத்தில் இருக்கிறான்’ என்று சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்.
குழந்தைகளின் மன நலனில் அக்கறை கொள்ளாவிட்டால் அது தேவையில்லாத பல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். ஒவ்வொரு குழந்தைகளிடமும் மன அழுத்த பாதிப்புக்குரிய அறிகுறிகள் ஒவ்வொரு விதமாக வெளிப்படும். சில குழந்தைகள் எப்போதும் கவலை தோய்ந்த முகத்தோடு காட்சியளிப்பார்கள். சிலர் யாரிடமும் பேசாமல் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருப்பார்கள். சில குழந்தைகளின் பேச்சில் ஆதங்கமும், கோபமும் வெளிப்படும். குழந்தைகள் மன அழுத்த பாதிப்புக்குள்ளாவதற்கு வீட்டுச்சூழலே பெரும்பாலும் காரணமாக அமைந்துவிடுகிறது.
குடும்பத்தில் தொடர்ந்து நடக்கும் குழப்பங்களும் குழந்தைகளின் நிம்மதியை கெடுத்துவிடும். பெற்றோர்கள் மன அழுத்த பாதிப்புக்குள்ளாகும்போது அது குழந்தைகளையும் பாதிக்கும். மிக நெருக்கமானவர்களின் பிரிவு, உறவினர்களுடன் பெற்றோருக்கு ஏற்படும் மனஸ்தாபம், செல்ல பிராணிகளின் இறப்பு, தாங்க முடியாத இழப்பு, அடிக்கடி ஏற்படும் உடல் நலக்குறைபாடு போன்றவையும் குழந்தைகளை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிவிடும்.
குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து அவர்களின் மன வருத்தங்களை போக்குவது பெற்றோரின் கையில்தான் இருக்கிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு ஆர்வம் காட்டமாட்டார்கள். அவர்களை அப்படியே விட்டுவிடாமல் ஆறுதலாக பேசி அவர்களின் மன வருத்தங்களை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.
குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்திக்கொள்வது பிரச்சினையின் வீரியத்தை குறைக்க வழிகோலும். அவர்களுடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலமாகவே மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிந்துவிட முடியும். அவர்கள் பேசுவதை பொறுமையாக கேட்க வேண்டும்.
தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவது இயல்பு என்பதை குழந்தைகளுக்கு புரியும்படி எடுத்துரையுங்கள். அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளை தெரியப்படுத்துங்கள். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் செயல்களை செய்வதற்கு அனுமதியுங்கள். அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்யும்போது ஊக்கப்படுத்துக்கள்.
குழந்தைகளின் மன நலனில் அக்கறை கொள்ளாவிட்டால் அது தேவையில்லாத பல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். ஒவ்வொரு குழந்தைகளிடமும் மன அழுத்த பாதிப்புக்குரிய அறிகுறிகள் ஒவ்வொரு விதமாக வெளிப்படும். சில குழந்தைகள் எப்போதும் கவலை தோய்ந்த முகத்தோடு காட்சியளிப்பார்கள். சிலர் யாரிடமும் பேசாமல் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருப்பார்கள். சில குழந்தைகளின் பேச்சில் ஆதங்கமும், கோபமும் வெளிப்படும். குழந்தைகள் மன அழுத்த பாதிப்புக்குள்ளாவதற்கு வீட்டுச்சூழலே பெரும்பாலும் காரணமாக அமைந்துவிடுகிறது.
குடும்பத்தில் தொடர்ந்து நடக்கும் குழப்பங்களும் குழந்தைகளின் நிம்மதியை கெடுத்துவிடும். பெற்றோர்கள் மன அழுத்த பாதிப்புக்குள்ளாகும்போது அது குழந்தைகளையும் பாதிக்கும். மிக நெருக்கமானவர்களின் பிரிவு, உறவினர்களுடன் பெற்றோருக்கு ஏற்படும் மனஸ்தாபம், செல்ல பிராணிகளின் இறப்பு, தாங்க முடியாத இழப்பு, அடிக்கடி ஏற்படும் உடல் நலக்குறைபாடு போன்றவையும் குழந்தைகளை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிவிடும்.
குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து அவர்களின் மன வருத்தங்களை போக்குவது பெற்றோரின் கையில்தான் இருக்கிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு ஆர்வம் காட்டமாட்டார்கள். அவர்களை அப்படியே விட்டுவிடாமல் ஆறுதலாக பேசி அவர்களின் மன வருத்தங்களை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.
குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்திக்கொள்வது பிரச்சினையின் வீரியத்தை குறைக்க வழிகோலும். அவர்களுடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலமாகவே மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிந்துவிட முடியும். அவர்கள் பேசுவதை பொறுமையாக கேட்க வேண்டும்.
தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவது இயல்பு என்பதை குழந்தைகளுக்கு புரியும்படி எடுத்துரையுங்கள். அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளை தெரியப்படுத்துங்கள். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் செயல்களை செய்வதற்கு அனுமதியுங்கள். அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்யும்போது ஊக்கப்படுத்துக்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X