search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளை பாதிக்கும் எலும்புத் தொற்றுநோய் - காரணமும், தீர்வும்
    X

    குழந்தைகளை பாதிக்கும் எலும்புத் தொற்றுநோய் - காரணமும், தீர்வும்

    குழந்தைகளுக்கு கை, கால்களில் உள்ள எலும்புகளையும், தோள்பட்டை எலும்புகளையும் ஆஸ்டியோமைலிட்டிஸ் எனப்படும் இந்த எலும்புத் தொற்று தாக்கக்கூடும்.
    குழந்தைகளுக்கு விளையாடும் போது தவறி கீழே விழுந்து அடிபட்டு, இரத்தக் காயம், வெட்டுக் காயம் போன்றவை ஏற்பட்டு விடுகிறது. மோசமான மிகவும் ஆழமான வெட்டுக் காயங்களால் நோய் தொற்று ஏற்படுகிறது. இந்த நோய் தொற்றுகள் சில சமயம் எலும்புகளைப் பாதித்து ஆஸ்டியோமைலிட்டிஸ் என்கின்ற எலும்பு தொற்று நோயை உருவாக்கும். 

    இந்த எலும்பு தோற்றினை ஸ்டெப்பெல்லோ காக்கஸ் ஏரியஸ் என்கின்ற பாக்டீரியாவே பொதுவாக ஏற்படுத்துகிறது. 
    குழந்தைகளுக்கு கை, கால்களில் உள்ள எலும்புகளையும், தோள்பட்டை எலும்புகளையும் ஆஸ்டியோமைலிட்டிஸ் எனப்படும் இந்த எலும்புத் தொற்று தாக்கக்கூடும்.

    எலும்புகளில் தொற்று எப்படி ஏற்படுகிறது?

    எலும்புகளில் பாக்டீரியா தொற்றுவது பல வழிகளில் ஏற்படுகிறது. உடலில் பாக்டீரியாவானது ஒரு இடத்தில் தொற்றிக் கொண்ட பிறகு இரத்த நாளங்களின் வழியாக எலும்புகளுக்குள் நுழைகின்றன. இதற்கு யஹமட்டோஜெனஸ் ஆஸ்டியோ மைலிட்டிஸ் என்று பெயர் பெரும்பாலானவர்களுக்கு இந்தத் தொற்றே ஏற்படுகிறது.

    சில சமயம் நோயின் மேற்பகுதியில் ஏற்படும் மிக மோசமான/ஆழமான வெட்டுக் காயங்களின் வழியாக உடலுக்குள் நுழையும் பாக்டீரியாக்கள் திசுக்களின் ஊடாகவும், எலும்புகள் உடைந்து தோலின் மேற்பகுதி வரை தெரியுமளவிற்கு ஏற்படும் காயங்கள் மூலமும் ஆஸ்டியோமைலிட்டிஸ் உருவாக காரணமாக ஆகி விடுகிறது.

    வயதானவர்களிடம் கால் மற்றும் பாதங்களில் உள்ள எலும்புகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அந்த இடத்தில் நடைபெறும் ரத்த ஒட்டத்தினாலும் இந்தத் தொற்று ஏற்படலாம்.

    இதன் நோய் அறிகுறி குணங்கள என்ன?

    (ஆஸ்டியேமைலிட்டிஸ்) எலும்புகளில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு விட்டது என்றால் பாதிக்கப்பட்ட எலும்புகளில் அதிக வலி ஏற்படும். அந்த இடத்தைச் சுற்றிலும் கதகதப்பாக இருக்கும். சிலபேருக்கு காய்ச்சல் போன்ற அசெளகரியங்கள் ஏற்படலாம்.

    பாதிக்கப்பட்ட எலும்புகள் மேற்புறத் தோலில் புண்கள் ஏற்படலாம், அல்லது சிவந்து வீங்கியும். தடித்தும் இருக்கலாம். ஆனால் குழந்தைகளிடம், பச்சிளம் சிறார்களிடமும் இது எந்த ஒரு வலியோ மேற்குறிப்பிட்ட அறிகுறிகளையோ இது வெளிப்படுத்தாது. மேலும் வயதான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தக் குழாய்கள் நரம்புகளால் இந்த வலியை உணர முடிவதில்லை.

    மருத்துவ சிகிச்சைகள் என்ன?

    பாதிக்கப்பட்ட எலும்புகளில் வலி அல்லது வீக்கம், ஆனால் ஏற்படும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக ஒரு எலும்பு சிகிச்சை நிபுணரை கலந்து ஆலோசிப்பது அவசியம். அலட்சியமாக இருந்தால் ஆஸ்டியோ மைலிட்டிஸ் நமது எலும்புகளுக்கு பெரிய ஆபத்தை உருவாக்கும் என்பதனை மறந்து விட கூடாது.

    இதற்கான சிகிச்சைகள் தற்போது தாராளமாக அனைத்து நகரங்களிலும் கிடைக்கின்றன. பாதிக்கப்பட்ட எலும்புப் பகுதியில் இருந்து ஊசி மூலம் பாக்டீரியாவினை எடுத்து அது எந்த வகையான பாக்டீரியா என சோதனை மூலம் கண்டறியப்படும் அதன் பிறகு அதற்கு தந்த ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் பரிந்துரை செய்யப்படும்.

    மேலும் சில பேருக்கும் எலும்புகளில் துளை சிதைவு ஏற்பட்டு, சீழ் பிடித்து மோசமாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட எலும்பு சிதைவுகளில் உள்ள சீழ், போன்றவற்றை வெளியே எடுத்து விடுவதன் மூலம், அந்த எலும்புப் பகுதி சுத்தம் அடைகிறது. இதனால் விரைவாக குணமடையலாம்.

    இந்நோய் வருவதற்கு காரணமான ஆழ்ந்த வெட்டுக் காயங்கள் இரத்தக் காயங்கள் போன்றவை ஏற்படும். பட்சத்தில் சோப் அல்லது குழாயில் ஊற்றும் நீரினால் நன்றாக குறைந்தது 5 நிமிடம் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு காயம்பட்ட இடத்தில் ஆன்டிபயாடிக் கிரீம் தடவ வேண்டும்.

    அக்காயத்தை சுத்தமாக வைக்க கிருமிகள் நீக்கப்பட்ட வலைத்துணியால் மூட வேணடும். அதில் கிருமிநாசினி மருந்தை தடவ வேண்டும். காயம் ஆறாமல் இருந்தாலோ அல்லது அதில் தொடர்ந்து வலி இருந்தாலோ, உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
    Next Story
    ×