search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு இசையை கற்பிக்க சில வழிகள்
    X

    குழந்தைகளுக்கு இசையை கற்பிக்க சில வழிகள்

    இசையுடன் அபரிமிதமான ஈடுபாட்டில் இருக்கும் குழந்தையின் அறிவு வளர்ச்சி அதிகரிப்பதோடு மட்டுமல்ல, இசையை நன்கு ரசிக்கும் ஒரு இசை ரசிகனாகவும் அவனை மாற்றுகிறது.
    இசையும் , நடனமும், குழந்தைகளின் புலன்களுக்கு இனிமையாகவும், தாளகதியுடனும் இருத்தல் அவசியம். பாடலின் அர்த்தத்தை விட ஒலியின் அழகை அவர்களை ரசிக்க வைக்கச் செய்ய வேண்டும்.உயிர்ப்புள்ள அசைவுகளும், பதிவுகளும், அவர்கள் காதுகளையும், மனதையும் மகிழ்விக்கின்றன.தாள கதியில் இருக்கும் நடன அசைவுகள் உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிகின்றன.


    1. பாடல்களைப் பாடவும்: சூழ்நிலைக் கேற்றவாறு, உறங்க வைப்பதற்கோ, வெளியில் அழைத்துச் செல்கையிலோ அதற்கேற்ற விதமான பாடலைப் பாடவும். குழந்தை பாடா விட்டாலும், அதனுடன் தொடர்புடைய செயலை (கைதட்ட, தலையாட்ட) செய்ய ஏதுவாக இருக்கும்.

    2. நீங்களே முழுப் பாடலையும் பாடவும். வரி வரியாக சொல்லித் தர முயற்சிக்காமல், முழுப்பாடலையும், குழந்தை கவனிக்குமாறு பாடவும். ஒரே பாடலை பலமுறை பாடிக் காட்டவும்.

    3. பாடலின் எல்லா வார்த்தைகளையும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க முயற்சிக்காதீர்கள். எவ்வளவு தெரிகிறதோ அவ்வளவு பாடட்டும். அதுவே இன்பமாக இருக்கும்.

    4. பாடலின் ராகம், டெக்னிக் போன்றவைகளை வலியக் கற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டாம். அவர்கள் எப்படிப் பாடுகிறார்கள் என்பதை விட பாடுகிறார்கள் என்பது முக்கியமானது.



    5. குழந்தையின் பாடலை ரெகார்ட் செய்து அவர்களுக்கு மீண்டும் போட்டுக் காட்டவும். அந்தப் பாடலுக்கே அவர்களை ஆடச் சொல்லவும்.

    6. அவர்களுக்கு நன்கு தெரிந்த பாடல், ரைம்ஸில் அதில் வரும் பெயரை எடுத்து விட்டு, அவர்கள் பெயரைப் போட்டுப் பாடவும். உதாரணம்: ஜானி ஜானி எஸ் பாப்பா

    7. மிக மெதுவாக, குழந்தை நீங்கள் விட்ட சொல்லை நிரப்புமாறு பாடவும்.

    இசையுடன் அபரிமிதமான ஈடுபாட்டில் இருக்கும் குழந்தையின் அறிவு வளர்ச்சி அதிகரிப்பதோடு மட்டுமல்ல, பிற்காலத்தில் இசையை நன்கு ரசிக்கும் ஒரு இசை ரசிகனாகவும் அவனை மாற்றுகிறது.

    இசையினால் குழந்தைகளின் மூளையில் ஏற்படும் வளர்ச்சிகள் எல்லாமே, வெறுமனே இசையை, அவர்கள் கேட்பதால் மட்டுமே நிகழ்ந்து விடுவதில்லை. ஏதேனும் ஒரு இசைக் கருவியை (பியானோ அல்லது வயலின் அல்லது வேறு ஏதேனும் ஒன்று) வாசிக்கப் பயிற்சி பெறுவதே எல்லா நல்ல பலன்களையும் ஒருசேர அளிக்க வல்லது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×