என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மகா மிருத்யுஞ்ஜெயர் கோவில் கும்பாபிஷேகம் 14-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்11 Jun 2019 5:41 AM GMT (Updated: 11 Jun 2019 5:41 AM GMT)
வில்லியனூர் அருகே மங்கலம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகா மிருத்யுஞ்ஜெயர் கோவில் கும்பாபிஷேகம் 14-ந் தேதி நடக்கிறது.
வில்லியனூர் கொம்யூன் மங்கலம் கிராமத்தில் ஸ்ரீமகா மிருத்யுஞ்ஜெயர் கோவில் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. மிருத்யுஞ்ஜெயர் சிவபெருமானின் அம்சங்களில் ஒன்றாவார். 4 அமிர்த கலசங்களுடன் தோன்றி மக்களின் தீராத நோய்களை தீர்த்தும், எமபயத்தை நீக்கியும், தீய சக்திகளால் ஏற்படும் துன்பங்களை விலக்கியும் அருள்பாலிப்பவர்.
முதல் முறையாக மிருத்யுஞ்ஜெயருக்கு வில்லியனூர் கொம்யூன் மங்கலம் கிராமத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணி முதல் 8 மணிக்குள் நடைபெறுகிறது. விழாவையொட்டி நாளை மறுநாள் (வியாழக் கிழமை) காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடைபெறுகிறது. அன்று மாலை 4 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை செய்யப்பட்டு யாகசாலை பிரவேசம் நடக்கிறது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு 14-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. அதைத் தொடர்ந்து மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக பூஜைகளை திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் தேவஸ்தான தலைமை சிவாச்சாரியார் சரவண குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்துகிறார்கள் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்கள் வெளியிடப்பட்டது.
முதல் முறையாக மிருத்யுஞ்ஜெயருக்கு வில்லியனூர் கொம்யூன் மங்கலம் கிராமத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணி முதல் 8 மணிக்குள் நடைபெறுகிறது. விழாவையொட்டி நாளை மறுநாள் (வியாழக் கிழமை) காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடைபெறுகிறது. அன்று மாலை 4 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை செய்யப்பட்டு யாகசாலை பிரவேசம் நடக்கிறது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு 14-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. அதைத் தொடர்ந்து மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக பூஜைகளை திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் தேவஸ்தான தலைமை சிவாச்சாரியார் சரவண குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்துகிறார்கள் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்கள் வெளியிடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X