search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகாமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா: பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
    X

    மகாமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா: பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

    மகா முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்றில் இருந்து பால் குடங்கள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
    ஆத்தூர் ஒன்றியம் பிள்ளையார்நத்தத்தில் உள்ள மகா முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்றில் இருந்து பால் குடங்கள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்களும், விழா கமிட்டியினரும் இணைந்து செய்திருந்தனர். விழாவையொட்டி கிராமம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
    Next Story
    ×