search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லிக்குப்பத்தில் வராகி அம்மனுக்கு மிளகாய் யாகம்
    X

    நெல்லிக்குப்பத்தில் வராகி அம்மனுக்கு மிளகாய் யாகம்

    நெல்லிக்குப்பத்தில் உள்ள பழமைவாய்ந்த செல்லியம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
    நெல்லிக்குப்பத்தில் உள்ள பழமைவாய்ந்த செல்லியம்மன் கோவிலில் வராகி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை பஞ்சமி திதி அன்று வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, நேற்று முன்தினம் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் இரவு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மிளகாய் (நிகும்பலா) யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை குருக்கள் ராமு, முருகன் ஆகியோர் செய்திருந்தனர். 
    Next Story
    ×