என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தங்க கமல வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன் வீதி உலா
Byமாலை மலர்24 April 2019 5:04 AM GMT (Updated: 24 April 2019 5:04 AM GMT)
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மேள தாளங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் அம்மன் தங்க கமல வாகனத்தில் சிறப்பு மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா தேரோட்டம் முடிந்து 8-ம் நாள் அன்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தேங்காய், பழக்கடை மற்றும் புஷ்பம் வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியையொட்டி காலை 10 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து அம்மன் புறப்பாடாகி வசந்த மண்டபம் சென்றடைந்தார்.
மாலை 3 மணிக்கு திருமஞ்சனமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேள தாளங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் அம்மன் தங்க கமல வாகனத்தில் சிறப்பு மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நிகழ்ச்சியில் விழாக்குழு தலைவர் எஸ்.ஆர்.மணிகண்டன், சிறுவடை வியாபாரிகள் சங்கத்தலைவர் சூறாவளி.பிச்சை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில், மேலாளர் ஹரிஹர சுப்ரமணியன், மணியக்காரர் ரமணி மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
மாலை 3 மணிக்கு திருமஞ்சனமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேள தாளங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் அம்மன் தங்க கமல வாகனத்தில் சிறப்பு மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நிகழ்ச்சியில் விழாக்குழு தலைவர் எஸ்.ஆர்.மணிகண்டன், சிறுவடை வியாபாரிகள் சங்கத்தலைவர் சூறாவளி.பிச்சை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில், மேலாளர் ஹரிஹர சுப்ரமணியன், மணியக்காரர் ரமணி மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X