search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா 25-ந்தேதி தொடங்குகிறது
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா 25-ந்தேதி தொடங்குகிறது

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.
    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி மே 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9.30 மணியில் இருந்து 10.15 மணிக்குள் கொடி ஏற்றப்படுகிறது.

    28-ந்தேதி மாலை 6 மணிக்கு கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா வருகிறார். மே 2-ந்தேதி காலை 7 மணிக்கு வண்டுலூர் சப்பரத்திலும், மாலை 6.30 மணிக்கு மேல் தங்க குதிரை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். மே 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 5-ந்தேதி இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் வீதி உலா வருகிறார்.

    முன்னதாக சித்திரை திருநாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஆண்டு தோறும் வஸ்திர மரியாதை செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வஸ்திர மரியாதை செய்யும் நிகழ்ச்சி அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதனையொட்டி மே 2-ந்தேதி காலை 7 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து கொண்டு வரப்படும் வஸ்திர பொருட்கள் (பட்டு பரிவட்டம்) மற்றும் மங்கலபொருட்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் ரெங்கவிலாச மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். பின்னர் அவை சகல மரியாதைகளுடன் வீதி வலம் முடிந்த பின்னர் நம்பெருமாளுக்கும், தாயாருக்கும் சாற்றப்படும்.

    சித்திரை தேர் திருவிழாவையொட்டி 25-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரை மூலவர் விசுவரூப சேவை கிடையாது, என ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×