என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம்
Byமாலை மலர்19 April 2019 5:45 AM GMT (Updated: 19 April 2019 5:45 AM GMT)
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. அதையொட்டி கிரிவலம் நேற்று மாலை 7.05 மணிக்கு தொடங்கி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.35 மணிக்கு முடிகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்ததால், பகலில் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மாலை பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. எனினும், நேற்று இரவு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டன.
கிரிவலப்பாதையில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. ஆங்காங்கே தற்காலிக நிழற்குடைகள், பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன. கூட்ட நெரிசலை தவிர்க்க 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தன. பக்தர்களின் வசதிக்காக 2 ஆயிரத்து 895 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
2 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்ததால், பகலில் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மாலை பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. எனினும், நேற்று இரவு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டன.
கிரிவலப்பாதையில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. ஆங்காங்கே தற்காலிக நிழற்குடைகள், பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன. கூட்ட நெரிசலை தவிர்க்க 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தன. பக்தர்களின் வசதிக்காக 2 ஆயிரத்து 895 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
2 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X