என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தண்டு மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டது
Byமாலை மலர்13 April 2019 7:49 AM GMT (Updated: 13 April 2019 7:49 AM GMT)
குண்டம் விழாவை முன்னிட்டு சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டது.
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் மிகவும் பழமையான தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு குண்டம் விழா நேற்று காலை கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதற்காக கடந்த 10-ந் தேதி சத்தியமங்கலத்தை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பாளையத்தில் இருந்து அரச மரத்தின் கம்பம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் 3 கிளைகள் கொண்ட கம்பமாக அது செதுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு கம்பத்தை பவானி ஆற்றுக்கு தூக்கி சென்றனர். அங்கு கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி மஞ்சள், குங்குமம் பூசப்பட்டது. பின்னர் கம்பத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து தாரை, தப்பட்டையுடன் கம்பத்தை ஆற்றில் இருந்து கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பிறகு பக்தர்களின் பக்தி கோஷங்கள் முழங்க கோவிலில் கம்பம் நடப்பட்டது.
இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். இரவு 8 மணியில் இருந்து 11 மணி வரை அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கம்பத்தை சுற்றி ஆடினர்.
வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா 24-ந் தேதி காலை 6 மணிக்கு நடக்கிறது. 25-ந் தேதி கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், 26-ந் தேதி திருவிளக்கு பூஜையும், 27-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், அடுத்த மாதம் (மே) 2-ந் தேதி மறுபூஜையும் நடக்கிறது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு கம்பத்தை பவானி ஆற்றுக்கு தூக்கி சென்றனர். அங்கு கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி மஞ்சள், குங்குமம் பூசப்பட்டது. பின்னர் கம்பத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து தாரை, தப்பட்டையுடன் கம்பத்தை ஆற்றில் இருந்து கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பிறகு பக்தர்களின் பக்தி கோஷங்கள் முழங்க கோவிலில் கம்பம் நடப்பட்டது.
இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். இரவு 8 மணியில் இருந்து 11 மணி வரை அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கம்பத்தை சுற்றி ஆடினர்.
வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா 24-ந் தேதி காலை 6 மணிக்கு நடக்கிறது. 25-ந் தேதி கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், 26-ந் தேதி திருவிளக்கு பூஜையும், 27-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், அடுத்த மாதம் (மே) 2-ந் தேதி மறுபூஜையும் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X