search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகாதேவபுரம் குஞ்சப்பணை மகா மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா
    X

    மகாதேவபுரம் குஞ்சப்பணை மகா மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா

    மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் குஞ்சப்பணை மகா மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்.
    கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம் மகாதேவபுரத்தில் குஞ்சப்பனை மகாமாரியம்மன் கோவில் உள்ளது.

    இக் கோவில் குண்டம் திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 12 -ந்தேதி கணபதி ஹோமம் பொரிச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து அக்னி கம்பம் நடுதல், திருவிளக்கு பூஜை வழிபாடு, அக்னி குண்டம் திறத்தல், பூவளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அதனைத்தொடர்ந்து குண்டம்இறங்குதல் நிகழ்ச்சிகள் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.அதிகாலை 4.30 மணிக்கு அம்மன் அழைப்பு நிகழ்ச்சியையொட்டி பவானி ஆற்றங்கரையில் இருந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய வண்ணம் நாதஸ்வர இசை மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கோவிலை அடைந்தது.

    அதன்பின்னர் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது.தலைமைப்பூசாரி வெள்ளிங்கிரி குண்டத்தை வலம் வந்து பூஜை செய்து குண்டத்தில் மல்லிகை மலர்ச்செண்டை வீசி அருளுடன் குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார். அவரைத் தொடர்ந்து உதவிபூசாரிகள் லோகநாதன் சிவன்கரகம், யோகேஸ்வரன்சக்தி கரகம், பிரபாகரன் கோலக் கூடை, புவனேஸ்குமார் கற்பூர தட்டு எடுத்து குண்டம் இறங்கினார்கள்.அவர்களைத்தொடர்ந்து ஆண்,பெண்பக்தர்கள், மாணவ -மாணவிகள் சிறுவர் சிறுமிகள் குண்டத்தில் இறங்கி நடந்து வந்தனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்.

    கோவில் தலைவர் சென்னியப்பநாடார், உதவித்தலைவர் மணி செயலாளர் கிட்டு, பொருளாளர் அய்யாசாமி, பாபு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×