search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவெள்ளறை கோவில் உற்சவர் செந்தாமரைக்கண்ணன், பங்கஜவல்லி தாயாருடன் எழுந்தருளியபோது எடுத்த படம்.
    X
    திருவெள்ளறை கோவில் உற்சவர் செந்தாமரைக்கண்ணன், பங்கஜவல்லி தாயாருடன் எழுந்தருளியபோது எடுத்த படம்.

    ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் திருவெள்ளறை பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம்

    ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் திருவெள்ளறை பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை ஆகிய இருவேளை களிலும் பெருமாள், தாயார் புறப்பாடும், பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெறுகின்றன.

    திருவிழாவின் 2-ம் நாளான நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் கோவிலின் உற்சவர் செந்தாமரைக்கண்ணன், பங்கஜவல்லி தாயாருடன் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றுக்கு புறப்பட்டு வந்தார்.

    நேற்று அதிகாலை ஸ்ரீரங்கம் வடக்குவாசல் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் பெருமாள், தாயார் எழுந்தருளினர். அங்கு பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பெருமாள், தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்தனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை திருவெள்ளறை சென்றடைந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் ஒன்றான கருடசேவை இன்று இரவு நடைபெறுகிறது. தேரோட்டம் வருகிற 31-ந் தேதி காலை நடைபெறுகிறது.
    Next Story
    ×