search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 4-ந்தேதி தொடங்குகிறது
    X

    மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 4-ந்தேதி தொடங்குகிறது

    தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந்தேதி தொடங்குகிறது. 17-ந்தேதி திருக்கல்யாணம்
    தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

    இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 4-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி மீனாட்சி- சுந்தரேசுவர் கோவிலில் 4-ந் தேதி வாஸ்து சாந்தி, நிலத்தேவர் வழிபாடு நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து ஏப்ரல் 8-ந் தேதி காலை 10.05 மணியில் இருந்து 10.29 மணிக்குள் கொடியேற் றத்துடன் முதல் நாள் திருவிழா தொடங்கு கிறது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 8-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை சுவாமி மற்றும் அம்மன் தினமும் காலை மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் 4 மாசி வீதிகளில் வீதி உலா நடைபெறுகிறது.

    ஏப்ரல் 9-ந் தேதி தங்க சப்பர வாகனம், பூத அன்ன வாகனம், 10-ந் தேதி தங்க சப்பர வாகனம், கைலாச பர்வதம், காமதேனு வாகனம், 11-ந் தேதி தங்கப் பல்லக்கு வாகனம், 12-ந் தேதி தங்க சப்பர வாகனம், தங்க குதிரை வாகனம், 13-ந் தேதி தங்கம், வெள்ளி ரி‌ஷப வாகனம், 14-ந் தேதி சிம்மாசனங்களில் நந்திகேஸ்வரர், யாழி வாகனம், 15-ந் தேதி பட்டாபிஷேகமும், 16-ந் தேதி திக்கு விஜயமும் நடக்கிறது.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 17-ந் தேதி (புதன்கிழமை) காலை 9.50 மணியில் இருந்து 10.14 மணிக்குள் நடக்கிறது.

    அன்று இரவு 8 மணிக்கு கல்யாண கோலத்தில் சுவாமி, அம்மன் பூப்பல்லக் கில் வீதி உலா வந்து பக்தர் களுக்கு அருள் பாலிக்கின் றனர்.

    ஏப்ரல் 18-ந் தேதி காலை 5.45 மணிக்கு சுவாமி-அம்மன் தேரோட்டம் நடக்கிறது. ஏப்ரல் 19-ந் தேதி தீர்த்தவாரி, தேவேந்திர பூஜையுடன் இரவு அம்மன், சுவாமி ரி‌ஷப வாகனத்தில்புறப்பாடு செய்வதுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித் திரை திருவிழா நிறைவு பெறுகி றது.

    அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவையொட்டி அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் திருக்கல்யாண மண்டபத்துக்கு ஏப்ரல் 15-ந் தேதி எழுந்தருளுகிறார்.

    ஏப்ரல் 17-ந் தேதி திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து எழுந்தருளும் கள்ள ழகர் அங்கிருந்து மாலை 6 மணிக்கு மதுரைக்கு புறப் படுகிறார்.

    ஏப்ரல் 18-ந் தேதி காலை 6 மணிக்கு மதுரை மூன்றுமாவடி பகுதியில் பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடக்கிறது. அன்று இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் திருமஞ்சணமா கிறார்.

    தொடர்ந்து ஏப்ரல் 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தல்லாகுளம் கோவிலில் இருந்து அதிகாலையில் புறப்படும் கள்ளழகர், அதிகாலை 5.45 மணியில் இருந்து 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளுகிறார்.

    இதையடுத்து ஏப்ரல் 20-ந் தேதி ராமராயர் மண்டகப்படியில் இரவு முழுவதும் தசாவதார நிகழ்ச்சியும், 21-ந் தேதி இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சணமாகும் கள்ளழகர் 22-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு பூப்பல்லக்கில் புறப்பட்டு ஏப்ரல் 23-ந் தேதி காலை 10.30 மணிக்கு அழகர் கோவிலை சென்றடைகிறார்.

    ஏப்ரல் 24-ந் தேதி உற்சவ சாந்தியுடன் கள்ளழகர் திருவிழா நிறைவடைகிறது.
    Next Story
    ×